என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.பி.எல்: வீரர்களை அணிகளுக்குள் மாற்றி கொள்ள வருகிற 15-ந்தேதி கடைசி நாள்
Byமாலை மலர்20 Dec 2016 3:52 AM GMT (Updated: 20 Dec 2016 3:52 AM GMT)
10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு (2017) ஏப்ரல், மே மாதத்தில் நடக்கிறது. அடுத்த சீசனுக்கான வீரர்களை அணிகளுக்குள் மாற்றி கொள்ள வருகிற 15-ந் தேதி கடைசி நாளாகும்.
10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு (2017) ஏப்ரல், மே மாதத்தில் நடக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் வருகிற பிப்ரவரி மாதம் நடக்கிறது. அடுத்த சீசனுக்கான வீரர்களை அணிகளுக்குள் மாற்றி கொள்ள வருகிற 15-ந் தேதி கடைசி நாளாகும்.
இந்த நிலையில் 8 அணிகளும் பல வீரர்களை தக்க வைத்து இருக்கிறது. தேவையற்ற வீரர்களை விடுவித்து இருக்கிறது. டோனி தலைமையிலான புனே அணி 16 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து) உள்பட 11 வீரர்களை விடுவித்து இருக்கிறது. குஜராத் அணி 16 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு 6 வீரர்களை விடுவித்து இருக்கிறது. பஞ்சாப் 19 வீரர்களை தக்கவைத்ததுடன் 4 வீரர்களை விடுவித்துள்ளது.
கொல்கத்தா அணி 14 வீரர்களை தக்கவைத்து கொண்டுள்ளது. 9 வீரர்களை விடுவித்து இருக்கிறது. மும்பை அணி 20 வீரர்களை தக்கவைத்து விட்டு 8 வீரர்களை விடுவித்துள்ளது. டெல்லி அணி 18 வீரர்களை தக்கவைத்து கொண்டு 7 வீரர்களையும், பெங்களூரு அணி 20 வீரர்களை தக்க வைத்து கொண்டு 10 வீரர்களையும், ஐதராபாத் அணி 17 வீரர்களை தக்க வைத்து கொண்டு 6 வீரர்களையும் விடுவித்து இருக்கின்றன.
இந்த நிலையில் 8 அணிகளும் பல வீரர்களை தக்க வைத்து இருக்கிறது. தேவையற்ற வீரர்களை விடுவித்து இருக்கிறது. டோனி தலைமையிலான புனே அணி 16 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து) உள்பட 11 வீரர்களை விடுவித்து இருக்கிறது. குஜராத் அணி 16 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு 6 வீரர்களை விடுவித்து இருக்கிறது. பஞ்சாப் 19 வீரர்களை தக்கவைத்ததுடன் 4 வீரர்களை விடுவித்துள்ளது.
கொல்கத்தா அணி 14 வீரர்களை தக்கவைத்து கொண்டுள்ளது. 9 வீரர்களை விடுவித்து இருக்கிறது. மும்பை அணி 20 வீரர்களை தக்கவைத்து விட்டு 8 வீரர்களை விடுவித்துள்ளது. டெல்லி அணி 18 வீரர்களை தக்கவைத்து கொண்டு 7 வீரர்களையும், பெங்களூரு அணி 20 வீரர்களை தக்க வைத்து கொண்டு 10 வீரர்களையும், ஐதராபாத் அணி 17 வீரர்களை தக்க வைத்து கொண்டு 6 வீரர்களையும் விடுவித்து இருக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X