என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நான் கேப்டனாக இருக்கும்போது அணியில் சரியாக ஆதரவு கிடைக்கவில்லை: தில்ஷன்
Byமாலை மலர்29 Aug 2016 4:15 PM GMT (Updated: 29 Aug 2016 4:15 PM GMT)
இலங்கை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட போது சக வீரர்களின் ஆதரவு தனக்கு கிடைக்கவில்லை என்று தில்ஷன் கூறியுள்ளார்.
இலங்கை அணியின் முன்னணி தொடக்க பேட்ஸ்மேன் ஆன திலகரத்னே தில்ஷன் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
போட்டிக்குப்பின் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது தான் கேப்டனாக இருந்த காலத்தில் சக வீரர்கள் ஆதரவு அளிக்கவில்லை என்றார்.
இதுகுறித்து தில்ஷன் மேலும் கூறுகையில், ‘‘2011-ம் ஆண்டு இலங்கை அணியின் கேப்டன் பதவி எனது கைக்கு வந்தபோது, தற்போது விளையாடாத முன்னாள் கேப்டன்கள் இருவர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், நீண்ட சமாதானத்திற்குப் பின் ஒருவர் சம்மதம் தெரிவித்தார் (அவர் குமார் சங்ககராவா அல்லது ஜெயவர்தனாவா என்று தில்ஷன் தெளிவாக கூறவில்லை).
நியூசிலாந்து அணிக்கெதிரான 3-வது போட்டியின்போது காயம் காரணமாக நான் இடம்பெறவில்லை. அப்போது குமார் சங்ககரா கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும், நான் கேப்டனாக இருக்கும்போது காயத்தை காரணம் காட்டி மேத்யூஸ் பந்து வீச மறுத்தார். ஆனால், நான் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டபின், உடனடியாக பந்து வீசினார். இதனால் நான் ஆச்சர்யம் அடைந்தேன்.
கேப்டன் பதவியில் இருந்து தூக்கியபோது வருத்தம் இருந்தது. ஆனால், எனது தனிப்பட்ட ஆட்டத்தை அது எந்த வகையிலும் பாதிக்கவில்லை’’ என்றார்.
போட்டிக்குப்பின் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது தான் கேப்டனாக இருந்த காலத்தில் சக வீரர்கள் ஆதரவு அளிக்கவில்லை என்றார்.
இதுகுறித்து தில்ஷன் மேலும் கூறுகையில், ‘‘2011-ம் ஆண்டு இலங்கை அணியின் கேப்டன் பதவி எனது கைக்கு வந்தபோது, தற்போது விளையாடாத முன்னாள் கேப்டன்கள் இருவர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், நீண்ட சமாதானத்திற்குப் பின் ஒருவர் சம்மதம் தெரிவித்தார் (அவர் குமார் சங்ககராவா அல்லது ஜெயவர்தனாவா என்று தில்ஷன் தெளிவாக கூறவில்லை).
நியூசிலாந்து அணிக்கெதிரான 3-வது போட்டியின்போது காயம் காரணமாக நான் இடம்பெறவில்லை. அப்போது குமார் சங்ககரா கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும், நான் கேப்டனாக இருக்கும்போது காயத்தை காரணம் காட்டி மேத்யூஸ் பந்து வீச மறுத்தார். ஆனால், நான் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டபின், உடனடியாக பந்து வீசினார். இதனால் நான் ஆச்சர்யம் அடைந்தேன்.
கேப்டன் பதவியில் இருந்து தூக்கியபோது வருத்தம் இருந்தது. ஆனால், எனது தனிப்பட்ட ஆட்டத்தை அது எந்த வகையிலும் பாதிக்கவில்லை’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X