search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.25 லட்சம் கேட்டு எனது சகோதரி என்னை அடித்து மிரட்டினார் - டுட்டீ சந்த் குற்றச்சாட்டு
    X

    ரூ.25 லட்சம் கேட்டு எனது சகோதரி என்னை அடித்து மிரட்டினார் - டுட்டீ சந்த் குற்றச்சாட்டு

    ஓரினச் சேர்க்கையாளர் என்று தன்னை வெளிப்படையாக அறிவித்த ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த், எனது சகோதரி 25 லட்சம் ரூபாய் கேட்டு என்னை மிரட்டி அடித்தார் என குற்றம்சாட்டியுள்ளார்.
    புவனேஸ்வர்:

    இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த், தான் ஒரு பெண்னை காதலித்து வருவதாக கூறினார். டுட்டீ சந்தின் சொத்துக்களை பறிப்பதற்காக அந்தப்பெண் டுட்டீ சந்தை பலவந்தப்படுத்தி திருமணம் செய்ய மிரட்டி வருவதாக இதுகுறித்து அவரது சகோதரி சரஸ்வதி சந்த், நேற்று கூறியிருந்தார்.



    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இன்று பேட்டியளித்த டுட்டீ சந்த், எனது சகோதரி சரஸ்வதி 25 லட்சம் ரூபாய் கேட்டு என்னை மிரட்டி வருகிறார். இதற்காக ஒருமுறை என்னை அவர் அடித்தார். இதுதொடர்பாக நான் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருக்கிறேன்.

    அவரது மிரட்டல் காரணமாகவே நான் காதலித்துவரும் பெண்ணைப்பற்றி நான் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×