என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவா ஓட்டலில் தகராறு - காதலியின் தலை முடியை வெட்டிய காதலன்
Byமாலை மலர்9 May 2019 10:39 AM GMT (Updated: 9 May 2019 10:39 AM GMT)
கோவா ஓட்டலில் தங்கியிருந்தபோது, காதலன் தனது தலை முடியை வெட்டி கொடுமை செய்ததாக கூறி காதலி போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். #ManBooked
தானே:
மும்பை திரையுலகில் பணிப்புரிந்து வரும் 23 வயதுடைய பெண் ஒருவர், வங்கானி பகுதியில் வசிக்கும் அமித் ஷெல்லார் எனும் நபருக்கு இரண்டரை வருடங்களுக்கு முன்னர் அறிமுகமாகியுள்ளார். இவர்கள் ஒரு வருடம் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். பின்னர் காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் ஒரே வீடெடுத்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். சில மாதங்கள் கழித்து அமித்தின் நடவடிக்கைகளில் அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த சந்தேகம் உண்மையாகியிருக்கிறது. அமித்துக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து அவரிடம் கேட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் இருவரும், இம்மாத தொடக்கத்தில் கோவா சென்றுள்ளனர். அங்கு ஓட்டலில் இருவரும் தங்கியிருக்கும்போது சண்டை தீவிரமடையவே, ஆத்திரம் தாங்காத அமித், அந்த பெண்ணின் தலை முடியை வெட்டியுள்ளார். பின்னர் அந்த பெண்னை விட்டு விட்டு அமித் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.
இச்சம்பவத்தையடுத்து அந்த பெண் மீண்டும் தானே வந்தடைந்தார். அங்கு போலீசாரிடம் திருமணம் செய்வதாக கூறி அமித் தன்னை ஏமாற்றி கற்பழித்ததாகவும், தலை முடியினை வெட்டி கொடுமை செய்ததாகவும் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் அமித் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். #ManBooked
மும்பை திரையுலகில் பணிப்புரிந்து வரும் 23 வயதுடைய பெண் ஒருவர், வங்கானி பகுதியில் வசிக்கும் அமித் ஷெல்லார் எனும் நபருக்கு இரண்டரை வருடங்களுக்கு முன்னர் அறிமுகமாகியுள்ளார். இவர்கள் ஒரு வருடம் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். பின்னர் காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் ஒரே வீடெடுத்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். சில மாதங்கள் கழித்து அமித்தின் நடவடிக்கைகளில் அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த சந்தேகம் உண்மையாகியிருக்கிறது. அமித்துக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து அவரிடம் கேட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் இருவரும், இம்மாத தொடக்கத்தில் கோவா சென்றுள்ளனர். அங்கு ஓட்டலில் இருவரும் தங்கியிருக்கும்போது சண்டை தீவிரமடையவே, ஆத்திரம் தாங்காத அமித், அந்த பெண்ணின் தலை முடியை வெட்டியுள்ளார். பின்னர் அந்த பெண்னை விட்டு விட்டு அமித் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.
இச்சம்பவத்தையடுத்து அந்த பெண் மீண்டும் தானே வந்தடைந்தார். அங்கு போலீசாரிடம் திருமணம் செய்வதாக கூறி அமித் தன்னை ஏமாற்றி கற்பழித்ததாகவும், தலை முடியினை வெட்டி கொடுமை செய்ததாகவும் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் அமித் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். #ManBooked
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X