என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒடிசாவில் தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் சரண் அடைந்தான்
Byமாலை மலர்25 Feb 2019 6:12 AM GMT (Updated: 25 Feb 2019 6:12 AM GMT)
ஒடிசாவில் போலீசாரால் 5 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட், சரண் அடைந்துள்ளான். #MaoistSurrenders
மால்கங்கிரி:
ஒடிசாவின் மால்கங்கிரி பகுதியைச் சேர்ந்த வாலிபர் தனஞ்செயா கோப்(27). மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த இவன் மீது கொலை, சாலை பராமரிப்பு வாகனங்களுக்கு தீவைப்பு, அலுவலகங்களில் குண்டு வைப்பு, போலீசார் மீது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட 27 குற்றச்செயல்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த இவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
மேலும், தனஞ்செயா கோப் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என மால்கங்கிரி போலீசார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தனஞ்செயா கோப், கோராபுட் காவல் நிலையத்தில் நேற்று டிஐஜி ஹிமான்சு லால் முன்னிலையில் சரணடைந்தான்.
இதனையடுத்து மாநில அரசின் மறு வாழ்வு திட்டத்தின்படி, கோப்பிற்கு பண உதவி மற்றும் மறு வாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. மேலும் கோப் சரணடைந்து, சமூகத்துடன் ஒன்றி வாழ விருப்பம் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். 2009ம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்த கோப், ஆந்திரா- ஒடிசா எல்லைப்பகுதியில் உள்ள கலிமேலா பகுதியில் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. #MaoistSurrenders
ஒடிசாவின் மால்கங்கிரி பகுதியைச் சேர்ந்த வாலிபர் தனஞ்செயா கோப்(27). மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த இவன் மீது கொலை, சாலை பராமரிப்பு வாகனங்களுக்கு தீவைப்பு, அலுவலகங்களில் குண்டு வைப்பு, போலீசார் மீது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட 27 குற்றச்செயல்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த இவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
மேலும், தனஞ்செயா கோப் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என மால்கங்கிரி போலீசார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தனஞ்செயா கோப், கோராபுட் காவல் நிலையத்தில் நேற்று டிஐஜி ஹிமான்சு லால் முன்னிலையில் சரணடைந்தான்.
இதனையடுத்து மாநில அரசின் மறு வாழ்வு திட்டத்தின்படி, கோப்பிற்கு பண உதவி மற்றும் மறு வாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. மேலும் கோப் சரணடைந்து, சமூகத்துடன் ஒன்றி வாழ விருப்பம் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். 2009ம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்த கோப், ஆந்திரா- ஒடிசா எல்லைப்பகுதியில் உள்ள கலிமேலா பகுதியில் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. #MaoistSurrenders
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X