search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுற்றுலா தலங்களில் ‘செல்பி’ விபத்து மரணங்களை தடுக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு
    X

    சுற்றுலா தலங்களில் ‘செல்பி’ விபத்து மரணங்களை தடுக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு

    சுற்றுலா தலங்களில் ‘செல்பி’ எடுப்பதால் ஏற்படும் விபத்துகளை தடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. #SelfieZone #TourismSpots
    புதுடெல்லி:

    நீர் வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் செல்போனில் ‘செல்பி’ புகைப்படம் எடுத்து வருகிறார்கள். படம் சிறப்பாக அமைய வேண்டி, அவர்கள் செய்யும் தவறுகளால் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கிறார்கள்.

    இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால், இவற்றை தடுக்க மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதுகுறித்து மத்திய உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் அகிர் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் கூறியதாவது:-

    சுற்றுலா தலங்களில் ‘செல்பி’ எடுக்கும்போது ஏற்படும் விபத்துகள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இத்தகைய விபத்துகளை தடுத்து சுற்றுலா பயணிகளை பாதுகாப்பதற்காக எண்ணற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில, யூனியன் பிரதேச அரசுகளை மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

    ‘செல்பி’ விபத்து ஏற்படும் பகுதிகளை முதலில் அடையாளம் கண்டறிய வேண்டும். அந்த இடங்களில் ‘செல்பி’ எடுக்க ‘தடை விதிக்கப்பட்ட பகுதி’ என்ற எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். அந்த இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்லாத வகையில் தடுப்புகளை அமைக்க வேண்டும். இவையெல்லாம் மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் முக்கிய பொறுப்பாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SelfieZone #TourismSpots
    Next Story
    ×