search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் விசுவ இந்து பரி‌ஷத் பேரணி: பாதுகாப்பு அதிகரிப்பு
    X

    ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் விசுவ இந்து பரி‌ஷத் பேரணி: பாதுகாப்பு அதிகரிப்பு

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் விசுவ இந்தி பரிஷத் பேரணி நடத்த இருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #VHP
    புதுடெல்லி:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று பேரணி மற்றும் மாநாடு நடைபெறுகிறது. அதில் நாடுமுழுவதும் இருந்து 3 லட்சம் முதல் 5 லட்சம் பேர் வரை வந்து கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகரில் பசு பாதுகாவலர்கள் மாநாடு நடந்தது.

    அதில் நடந்த வன்முறை மற்றும் கலவரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதுபோன்று சம்பவம் எதுவும் நடைபெறாமல் தடுக்க டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    மாநாடு மற்றும் பேரணி நடைபெறும் ராம்லீலா மைதானம் 50 ஆயிரம் பேர் மட்டுமே கூடும் கொள்ளளவு கொண்டது. ஆனால் 5 லட்சம் பேர் வரை கூடுவார்கள் என் எதிர்பார்க்கப்படுவதால் டெல்லி போலீசாருடன் 25 முதல் 30 கம்பெனி எல்லை பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    ராம்லீலா மைதானம் உள்ள மத்திய டெல்லி 11 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அங்கு உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் ராம்லீலா மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 210-க்கும் மேற்பட்ட கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பேரணி கடந்து வரும் டெல்லி கேட் மற்றும் ராஜ பாதை பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
    Next Story
    ×