என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் தான் அதிக ஊழல் நடைபெறுகிறது - கெஜ்ரிவால் விளாசல்
Byமாலை மலர்8 Sep 2018 6:43 PM GMT (Updated: 8 Sep 2018 6:43 PM GMT)
முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விட தற்போதைய பாஜக ஆட்சியில் தான் அதிகமாக ஊழல் நடைபெறுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். #ArvindKejriwal
லக்னோ :
உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய முன்னாள் மந்திரி யஷ்வந்த் சின்கா, நடிகரும் பா.ஜ.க எம்.பி.யுமான சத்ருகன் சின்கா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விட பா.ஜ.க ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-
முன்னர் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி ஊழலில் திளைத்த காரணத்தால் கோபமடைந்த மக்கள் அக்கட்சியை ஆட்சியில் இருந்து தூக்கி எரிந்துவிட்டு மாற்றத்தை உருவாக்குவோம் என வாக்குறுதி அளித்த பா.ஜ.க.விடம் ஆட்சியை ஒப்படைத்தனர். ஆனால் இப்போது இந்த இரண்டு கட்சிகளும் ஊழல் கட்சிகளாகிவிட்டன.
சொல்லப்போனால் முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விட தற்போதைய பா.ஜ.க ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி ஊழல் என்றால், பா.ஜ.க ஆட்சியில் சகாரா-பிர்லா ஊழல்.
காங்கிரஸ் ஆட்சியில் காமன்வெல்த் ஊழல் என்றால், பா.ஜ.க ஆட்சியில் லலித் மோடி ஊழல். அவர்கள் போபர்ஸ் விமான ஊழலில் ஈடுபட்டார்கள் என்றால், இவர்கள் ரபேல் விமான ஊழலில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் ஆம் ஆத்மியும், மத்தியில் பா.ஜ.க.வும் ஒரே நேரத்தில் ஆட்சிக்கு வந்தன.
ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு பள்ளிகள் தரம் உயர்வு, மருத்துவமனைகள் எண்ணிக்கை அதிகரிப்பு, குறைந்த விலையில் மின்சாரம் வினியோகம் என்று டெல்லியில் நாங்கள் செய்த சாதனைகள் உலகளவில் பேசப்படுகிறது.
ஆனால், இதைப்போன்ற நலத்திட்டங்களை நாடு முழுவதும் மோடியால் ஏன் செய்ய முடியவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்றவற்றால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பா.ஜ.க எம்.பி சத்ருகன் சின்கா கூறுகையில், ‘ பா.ஜ.க எம்.பி.யாக இருந்துகொண்டு தொடர்ந்து பா.ஜ.க.வை விமர்சித்து பேசிவருவது ஏன்? என பலரும் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். நான் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவனாக இருக்கலாம், ஆனால் எனக்கு கட்சியை விட பாரதிய ஜனதா(இந்திய மக்கள்) தான் முக்கியம்’ என கூறினார். #ArvindKejriwal
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X