search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காளத்தில் படகு கவிழ்ந்து விபத்து - 7 பேர் மாயம்
    X

    மேற்கு வங்காளத்தில் படகு கவிழ்ந்து விபத்து - 7 பேர் மாயம்

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பைரவ் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது, இதில், 7 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
    கொல்கத்தா :

    மேற்கு வங்காளம் மாநிலம், மர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பைரவ் ஆற்றில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 7 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    ஹரிஹர்புரா எனும் இடத்தில் இருந்து சுமார் 40 பயணிகளுடன் விரிந்தபன்பூர் நோக்கி 2 படகுகள் இன்று இரவு 7 மணியளவில் சென்றது. அப்போது கரிப்பூர் எனும் இடத்தில் ஒரு படகு தண்ணீரில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட நீதிபதி பி.உலகநாதன் அப்பகுதிக்கு சென்று விபத்து நிகழ்ந்த இடத்தில் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ படகு கவிழத்தொடங்கியதும் அதில் இருந்த பலர் கரையை நோக்கி தண்ணீரில் நீந்தி பாதுகாப்பாக வந்துவிட்டனர். ஆனாலும், படகில் பயணம் செய்த 7 பேர் பற்றிய தகவல் இல்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரவு நேரத்தில் தேடுதல் பணியை மேற்கொள்ள தேவையான லைட் வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது' என அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×