என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்காளத்தில் படகு கவிழ்ந்து விபத்து - 7 பேர் மாயம்
Byமாலை மலர்6 Sep 2018 6:25 PM GMT (Updated: 6 Sep 2018 6:25 PM GMT)
மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பைரவ் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது, இதில், 7 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா :
மேற்கு வங்காளம் மாநிலம், மர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பைரவ் ஆற்றில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 7 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஹரிஹர்புரா எனும் இடத்தில் இருந்து சுமார் 40 பயணிகளுடன் விரிந்தபன்பூர் நோக்கி 2 படகுகள் இன்று இரவு 7 மணியளவில் சென்றது. அப்போது கரிப்பூர் எனும் இடத்தில் ஒரு படகு தண்ணீரில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட நீதிபதி பி.உலகநாதன் அப்பகுதிக்கு சென்று விபத்து நிகழ்ந்த இடத்தில் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ படகு கவிழத்தொடங்கியதும் அதில் இருந்த பலர் கரையை நோக்கி தண்ணீரில் நீந்தி பாதுகாப்பாக வந்துவிட்டனர். ஆனாலும், படகில் பயணம் செய்த 7 பேர் பற்றிய தகவல் இல்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரவு நேரத்தில் தேடுதல் பணியை மேற்கொள்ள தேவையான லைட் வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது' என அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்காளம் மாநிலம், மர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பைரவ் ஆற்றில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 7 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஹரிஹர்புரா எனும் இடத்தில் இருந்து சுமார் 40 பயணிகளுடன் விரிந்தபன்பூர் நோக்கி 2 படகுகள் இன்று இரவு 7 மணியளவில் சென்றது. அப்போது கரிப்பூர் எனும் இடத்தில் ஒரு படகு தண்ணீரில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட நீதிபதி பி.உலகநாதன் அப்பகுதிக்கு சென்று விபத்து நிகழ்ந்த இடத்தில் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ படகு கவிழத்தொடங்கியதும் அதில் இருந்த பலர் கரையை நோக்கி தண்ணீரில் நீந்தி பாதுகாப்பாக வந்துவிட்டனர். ஆனாலும், படகில் பயணம் செய்த 7 பேர் பற்றிய தகவல் இல்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரவு நேரத்தில் தேடுதல் பணியை மேற்கொள்ள தேவையான லைட் வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது' என அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X