search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோட்டின் நடுவில் உள்ள புல்வெளியில் குழந்தை விழுந்து கிடக்கும் காட்சி.
    X
    ரோட்டின் நடுவில் உள்ள புல்வெளியில் குழந்தை விழுந்து கிடக்கும் காட்சி.

    பெங்களூருவில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை உயிர் தப்பிய அதிசயம்- வீடியோ

    பெங்களூருவில் நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. #RoadAccident #MiraculousEscape
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சென்ன பரமேஸ்வர். இவரது மனைவி ரேணுகா. இவர்கள் 2 பேரும் தங்களது குழந்தையுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் பெங்களூருவை அடுத்த நெலமங்கலா சுங்கவரி சோதனைச்சாவடி அருகே அரிசின் குந்தே ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.

    இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் முன்னாள் சென்ற இன்னொரு மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் ரோட்டில் விழுந்து காயம் அடைந்தனர். ஆனால் அந்த மோட்டார் சைக்கிள் நிற்காமல் அரை கிலோமீட்டர் தூரம் ஓடியது.


    பின்னர் ஒரு திருப்பத்தில் அந்த மோட்டார் சைக்கிள் கீழே சரிந்தது. இதில் அந்த குழந்தை ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பில் போய் விழுந்தது.

    அப்போது அந்த வழியாக ஏராளமான கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்றாலும் அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதவில்லை. குழந்தை தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த குழந்தை மீதும் எந்த வாகனங்களும் மோதவில்லை.

    அந்த நேரத்தில் கன்னட நடிகர் கார்த்திக் கவுடா வந்தார். அவரும் மற்றவர்களும் குழந்தையை மீட்டனர். அந்த குழந்தைக்கு எந்தவித காயமும் இல்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. ஆனால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த கணவன்-மனைவி இருவரும் லேசான காயம் அடைந்து பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து நடந்த வீடியோவை நடிகர் கார்த்திக் கவுடா வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.  #RoadAccident  #MiraculousEscape #Bangalore




    Next Story
    ×