search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாராஷ்டிராவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தினர் 7 பேர் கைது
    X

    மகாராஷ்டிராவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தினர் 7 பேர் கைது

    மகாராஷ்டிராவில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 7 பேரை கைது செய்துள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.


    மும்பை :

    மாகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள பாயேந்தர் எனும் பகுதியில் உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி சட்ட விரோதமாக குடியிருந்த வங்காளதேசத்தினர் 7 பேரை இந்திய பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும், அவர்களுக்கு குடியிருக்க வாடகை வீடு அளித்த வீட்டு உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட விரோதமாக குடியிருந்த அவர்களை பற்றி உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்காத குற்றத்திற்காக வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்ட 7 பேரும் ஓட்டுனர் மற்றும் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்தவர்கள் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
    Next Story
    ×