search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது ராணுவம்
    X

    காஷ்மீர் என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது ராணுவம்

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #KashmirEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து, அம்மாவட்டத்தின் வனப்பகுதியான ரபியாபாத்தில் பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    அவர்களின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுத்து பயங்கரவாதிகள் மீது சரமாரி எதிர் தாக்குதல் நடத்தியதில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

    அப்பகுதியில், பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #KashmirEncounter 
    Next Story
    ×