search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீருக்குள் இந்த ஆண்டு 69 பயங்கரவாதிகள் ஊடுருவல் - மக்களவையில் மத்திய மந்திரி தகவல்
    X

    ஜம்மு காஷ்மீருக்குள் இந்த ஆண்டு 69 பயங்கரவாதிகள் ஊடுருவல் - மக்களவையில் மத்திய மந்திரி தகவல்

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் இந்த ஆண்டு 69 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக மக்களவையில் மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். #LokSabha #JKInfiltration
    புதுடெல்லி:

    பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு:-

    பயங்கரவாதத்தை பாதுகாப்பு படை வெற்றிகரமாக சமாளித்துள்ளது. இந்த ஆண்டில் ஜூன் மாதம் வரை 113 முறை பயங்கரவாதிகள் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றனர். 69 பயங்கரவாதிகள் ஊடுருவினர். இதில் 14 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 50 பேர் எல்லை வழியாகவே திரும்பிச் சென்றுள்ளனர்.



    2014ம் ஆண்டில் இருந்து 2018ம் ஆண்டு ஜூலை வரை 694 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் மற்றும் சந்தேக நபர்கள் என மொத்தம் 368 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் ஜூலை வரை 308 வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 90 என்கவுண்டர்களில் 113 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படை தரப்பில் 49 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீரில் உள்ள மக்களில் சிலர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இவ்வாறு மத்திய மந்திரி தெரிவித்தார். #LokSabha #JKInfiltration
    Next Story
    ×