search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் மாநில முதல்வர் வேட்பாளராக மீண்டும் வசுந்தரா ராஜே முன்னிருத்தப்படுவார் - அமித் ஷா
    X

    ராஜஸ்தான் மாநில முதல்வர் வேட்பாளராக மீண்டும் வசுந்தரா ராஜே முன்னிருத்தப்படுவார் - அமித் ஷா

    அடுத்து நடைபெற உள்ள ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக வசுந்தரா ராஜே சிந்தியா மீண்டும் முன்னிருத்தப்படுவார் என பா.ஜ.க தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
    ஜெய்பூர் :

    ராஜஸ்தான் மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு தயாராகும் விதமாக அம்மாநில பா.ஜ.க செயற்குழு கூட்டம் ஜெய்பூரில் நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தின் நிறைவு நாளான நேற்று பா.ஜ.க தலைவர் அமித் ஷா கலந்துகொண்டார்.

    பா.ஜ.க நிர்வாகிகள் முன்னிலையில் பேசிய அமித் ஷா, ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பா.ஜ.க தேர்தலை சந்திக்கும், வசுந்தரா, அருதிப்பெரும்பான்மையுடன் மீண்டும் முதல்வராக வருவார். சத்தீஷ்கர் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். 

    பா.ஜ.க தொண்டர்களும், நிர்வாகிகளும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி பா.ஜ.க.வை வெற்றி வாகை சூட வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×