search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நொய்டா கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
    X

    நொய்டா கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

    உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா நகரில் இரு கட்டிடங்கள் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. #GreaterNoidaBuildingCollapse
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவில் உள்ள ஷா பெரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் 6 மாடி கட்டிடம் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்ததில் அதன் அருகாமையில் இருந்த 4 மாடி கட்டிடமும் சேர்ந்து இடிந்து விழுந்தது.

    இதில், 4 மாடி கட்டிடத்தில் வசித்து வந்த 18 குடும்பங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர்.



    தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.#GreaterNoidaBuildingCollapse
    Next Story
    ×