search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா-கானா இடையே இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து
    X

    இந்தியா-கானா இடையே இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து

    இந்தியா மற்றும் கானா நாடுகள் இடையிலான உறவினை வலுப்படுத்துவது தொடர்பாக இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
    புதுடெல்லி :

    நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக கானா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஷெர்லி போச்வே இந்தியா வந்துள்ளார். 

    மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசிய ஷெர்லி போச்வே, இருநாடுகளுக்கு இடையே வளர்ச்சியில் ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்து ஆலோசனை நடத்தினார்.

    ஆலோசனைக்கு பிறகு இந்தியா மற்றும் கானா இடையிலான உறவினை வலுப்படுத்துவது தொடர்பான இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 

    இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ராவிஷ் குமார், இரண்டு நாடுகளுக்கும் இடையே கலாச்சார பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×