search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெறியாட்டம் - துணை ராணுவப் படை வீரர்கள் பலி
    X

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெறியாட்டம் - துணை ராணுவப் படை வீரர்கள் பலி

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் இரு மாவட்டங்களில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் துணை ராணுவப் படையை சேர்ந்த இரு வீரர்கள் உயிரிழந்தனர். #CRPFjawanskilled #Kashmirmilitantattack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் அனந்தாக் மாவட்டத்தில் இன்று துணை ராணுவப் படையை சேர்ந்த வீரர்கள் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சபால் சவுக் என்னும் இடத்தில் அவர்களை இடைமறித்து பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் துணை ராணுவப் படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் கான்ஸ்டபிள் சந்தீப் ஆகியோர் சம்பவ இடத்திலேயே வீரமரணம் அடைந்தனர்.



    இதேபோல், குல்காம் மாவட்டம், யாரிப்போரா நகரில் உள்ள காவல் நிலையம் மீது பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிகளால் சுட்டு ஆவேசமாக தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். அவர்களை கைது செய்ய பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். #CRPFjawanskilled #Kashmirmilitantattack 
    Next Story
    ×