search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் தமிழக மீனவர்கள் 24 பேர் சிறைபிடிப்பு
    X

    ஆந்திராவில் தமிழக மீனவர்கள் 24 பேர் சிறைபிடிப்பு

    தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து வரும் நிலையில் தற்போது ஆந்திர மீனவர்களும் தமிழக மீனவர்களை சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருமலை:

    நாகப்பட்டினம் அக்கரைபட்டையை சேர்ந்த மீனவர்கள் 24 பேர் 2 விசைப்படகுகளில் கடலில் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் தமிழக எல்லையை தாண்டி ஆந்திர எல்லையில் நெல்லூர் கடற்கரை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அங்கு மீன் பிடிக்க வந்த ஆந்திர மீனவர்கள் தமிழக மீனவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். எங்கள் பகுதிக்குள் நீங்கள் மீன் பிடிக்க வரக்கூடாது. தமிழக கடற்கரை பகுதிகளிலேயே மீன் பிடிக்க வேண்டும் என்று கூறி அவர்களை சிறைபிடித்தனர்.

    2 விசைப்படகுகளுடன் சிறை பிடிக்கப்பட்ட 24 மீனவர்களையும் ஆந்திர கடலோர பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து வரும் நிலையில் தற்போது ஆந்திர மீனவர்களும் தமிழக மீனவர்களை சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் ஆந்திராவில் சிறை பிடிக்கப்பட்ட 24 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி நாகப்பட்டினம் மீனவர்கள் நாகை கலெக்டர் சுரேஷ்குமாரை சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.

    Next Story
    ×