என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்தை 48 மணி நேரத்தில் பதிவு செய்ய வேண்டும் - மேனகா காந்தி
Byமாலை மலர்6 Jun 2018 3:33 PM GMT (Updated: 6 Jun 2018 3:33 PM GMT)
இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்கள் 48 மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என மத்திய மந்திரி மேனகா காந்தி இன்று தெரிவித்துள்ளார். #NRImarriages #ManekaGandhi
புது டெல்லி :
வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் திருமணம் செய்துகொண்டால் அந்த திருமணத்தை பதிவு செய்ய எந்த வரைமுறையும் இல்லாமல் இருந்தது. ஆனால், இந்தியாவில் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்தை 30 நாட்களில் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யவில்லை என்றால் ஒரு நாளைக்கு 5 ரூபாய் வீதம் அபராதம் விதிக்க வேண்டும் என இந்திய சட்ட ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்கள் 48 மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்பட வேண்டும் அப்படி பதிவு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு பாஸ்போர்ட் அல்லது விசா வழங்கப்படாது என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி இன்று தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய மகளிர் ஆணையத்தின் கோரிக்கையின்படி வேளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து திருமணம் செய்த பின்னர் அவர்களின் வாழ்க்கை துணையை கைவிட்டு விட்டு மீண்டும் வெளிநாடு செல்பவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். #NRImarriages #ManekaGandhi
வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் திருமணம் செய்துகொண்டால் அந்த திருமணத்தை பதிவு செய்ய எந்த வரைமுறையும் இல்லாமல் இருந்தது. ஆனால், இந்தியாவில் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்தை 30 நாட்களில் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யவில்லை என்றால் ஒரு நாளைக்கு 5 ரூபாய் வீதம் அபராதம் விதிக்க வேண்டும் என இந்திய சட்ட ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்கள் 48 மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்பட வேண்டும் அப்படி பதிவு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு பாஸ்போர்ட் அல்லது விசா வழங்கப்படாது என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி இன்று தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய மகளிர் ஆணையத்தின் கோரிக்கையின்படி வேளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து திருமணம் செய்த பின்னர் அவர்களின் வாழ்க்கை துணையை கைவிட்டு விட்டு மீண்டும் வெளிநாடு செல்பவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். #NRImarriages #ManekaGandhi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X