search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை  செய்ய பெண் போலீசுக்கு மகாராஷ்டிரா அரசு அனுமதி
    X

    பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய பெண் போலீசுக்கு மகாராஷ்டிரா அரசு அனுமதி

    மகாராஷ்டிரா மாநில காவல்துறையில் பணியாற்றும் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. #Maharashtrawomancop #sexchangesurgery
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் லலிதா சால்வே(29). மாநில காவல்துறை பணியில் சேர்ந்த இவர் தற்போது இம்மாவட்டத்துக்கு உட்பட்ட மஜால்கான் காவல் நிலையத்தில் பெண் கான்ஸ்டபிள் ஆக வேலை செய்து வருகிறார்.

    கடந்த 1988-ம் பிறந்த லலிதா, நான்காண்டுகளுக்கு முன்னர் தனது உடலில் ஏற்பட்ட குரோமசோம்களின் கிளர்ச்சியை உணர்ந்த தனது ஆண் நண்பர்களைப்போல் நாமும் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார். 

    பெண்ணின் உடல் அமைப்புடனும், ஆணுக்குரிய இதர இயல்புகளையும் சமநிலைப்படுத்த இயலாமல் திண்டாடிய லலிதா, பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு முழுவதுமாக ஆணாகவே மாறிவிட தீர்மானித்திருந்தார். இதற்காக, லலித் என்ற ஆண் பெயரையும் தனக்கு சூட்டி கொண்டார்.

    பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி கேட்டும், இதற்கான விடுமுறை கேட்டும் மாவட்ட காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு லலிதா விண்ணப்பித்திருந்தார்.

    ஆனால், போலீஸ் வேலைக்கு ஆண்-பெண்களிடம் உயரம், எடை மற்றும் இதர உடல் அமைப்புகள் வெவ்வேறானவை என குறிப்பிட்ட காவல்துறை அவரது விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது.

    இதைதொடர்ந்து, ஒருமாத மருத்துவ விடுமுறை அளிக்குமாறும், அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஆண் காவலராக பணியை தொடர அனுமதிக்குமாறும் மாநில காவல்துறை டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என்ற  கோரிக்கையுடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பை ஐகோர்ட்டை லலிதா அணுகினார். விடுமுறை அளிக்க முடியாது என டி.ஜி.பி. சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

    இது அரசு துறை சார்ந்த விவகாரம் என்பதால் மாநில நிர்வாக தீர்ப்பாய நீதிமன்றத்தை நாடுமாறு ஐகோர்ட் அறிவுறுத்தியது. இதற்கிடையில், பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக மும்பை ஜே.ஜே. மருத்துவமனை டாக்டர்களுடன் ஆலோசனை நடத்திய லலிதா தனது கோரிக்கையை முன்வைத்து கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்-ஐ சந்தித்து மனு அளித்திருந்தார்.

    இந்நிலையில், பிறப்புறுப்பு மாற்று அறுவை செய்துகொள்ள லலிதாவுக்கு அனுமதி அளித்து உயரதிகாரிகளிடம் இருந்து தற்போது கடிதம் வந்துள்ளதாகவும், இந்த தகவல் லலிதாவுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பீட் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஸ்ரீதர் இன்று தெரிவித்துள்ளார். #Maharashtrawomancop #sexchangesurgery
    Next Story
    ×