என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதி கோவிலில் 15 அர்ச்சகர்கள் நீக்கம் - தேவஸ்தானம் நடவடிக்கை
Byமாலை மலர்19 May 2018 6:49 AM GMT (Updated: 19 May 2018 6:49 AM GMT)
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதையடுத்து 15 அர்ச்சகர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
நகரி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகானாச ஆகம பரம்பரையை சேர்ந்த 4 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பரம்பரை முறை அடிப்படையில் அர்ச்சகர்களாக இருந்து வருகின்றனர்.
தலைமை அர்ச்சகராக கொல்லப்பள்ளி குடும்பத்தை சேர்ந்த ரமண தீட்சிதலு இருந்தார்.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு மற்றும் சீனிவாசா தீட்சிதலு, நாராயணா தீட்சிதலு, நரசிம்மா தீட்சிதலு ஆகிய அர்ச்சகர்களுக்கு வயது வரம்பை காரணம் காட்டி கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.
பணி ஓய்வு உத்தரவை ரமண தீட்சிதலுவிடம் வழங்க அவரது வீட்டுக்கு தேவஸ்தான ஊழியர்கள் சென்றபோது அவர் இல்லாததால் நோட்டீசை வீட்டு வாசலில் ஒட்டி சென்றனர்.
இதற்கிடையே மேலும் 15 அர்ச்சகர்களுக்கு கட்டாய ஓய்வு அளித்து திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து இருக்கிறது.
இன்னும் ஓரிரு நாளில் அந்த அர்ச்சகர்களுக்கு கட்டாய ஓய்வு உத்தரவு நோட்டீஸ் வழங்கப்படுகிறது. இது குறித்து தலைமை அர்ச்சகராக இருந்த ரமண தீட்சிதலு கூறியதாவது:-
கடந்த 1996-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு திருப்பதி கோவிலில் வாரிசு அர்ச்சகர் பணி நியமனத்தை ரத்து செய்தது. ஆனால் அதற்காக இயற்றப்பட்ட சட்டப்பிரிவு 144-ன்படி அவர்களின் பணிக்கும், அவர்களுக்கு கிடைக்கும் சம்பாவனை, மரியாதைக்கு எந்தவித குறையும் இருக்கக்கூடாது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அர்ச்சகர்கள் முதுமையில் தங்களை காத்து கொள்ள ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கூறி உள்ளது. ஆனால் அர்ச்சகர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் உரிய மரியாதையை அளிக்கவில்லை. பூஜை கைங்கர்யங்களை விரைவில் செய்யுமாறு வற்புறுத்துகின்றனர். இதனால் ஏழுமலையான் கைங்கர்யங்களில் குறைபாடு ஏற்படுகிறது.
இதுபற்றி நான் வெளியில் கூறியதால், அர்ச்சகர்களுக்கு ஓய்வு பெறும் வயது உச்ச வரம்பை 65 வயதுக்கு நிர்ணயித்த உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டு ஏற்படுத்திய சட்டப்பிரிவின்படி தேவஸ்தான அர்ச்சகர்களுக்கு ஓய்வு பெறும் வயது உச்சவரம்பை நிர்ணயிக்க கூடாது. எனவே இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வேன் என்றார்.
திருப்பதி கோவில் புதிய தலைமை அர்ச்சகராக கொல்லப்பள்ளி குடும்பத்தை சேர்ந்த வேணு கோபால் தீட்சிதலு நியமிக்கப்பட்டார். மேலும் தலைமை அர்ச்சகர்களை பைடிபள்ளி குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ண சேஷாசல் தீட்சிதலு, பெத்திண்ட்டி குடும்பத்தை சேர்ந்த சீனிவாச தீட்சிதலு, திருப்பதி அம்மா குடும்பத்தை சேர்ந்த கோவிந்தராசு தீட்சிதலு ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில் அர்ச்சகர் பணியில் இருந்த 32 பேரை பணி நிரந்தரம் செய்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகானாச ஆகம பரம்பரையை சேர்ந்த 4 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பரம்பரை முறை அடிப்படையில் அர்ச்சகர்களாக இருந்து வருகின்றனர்.
தலைமை அர்ச்சகராக கொல்லப்பள்ளி குடும்பத்தை சேர்ந்த ரமண தீட்சிதலு இருந்தார்.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு மற்றும் சீனிவாசா தீட்சிதலு, நாராயணா தீட்சிதலு, நரசிம்மா தீட்சிதலு ஆகிய அர்ச்சகர்களுக்கு வயது வரம்பை காரணம் காட்டி கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.
பணி ஓய்வு உத்தரவை ரமண தீட்சிதலுவிடம் வழங்க அவரது வீட்டுக்கு தேவஸ்தான ஊழியர்கள் சென்றபோது அவர் இல்லாததால் நோட்டீசை வீட்டு வாசலில் ஒட்டி சென்றனர்.
இதற்கிடையே மேலும் 15 அர்ச்சகர்களுக்கு கட்டாய ஓய்வு அளித்து திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து இருக்கிறது.
இன்னும் ஓரிரு நாளில் அந்த அர்ச்சகர்களுக்கு கட்டாய ஓய்வு உத்தரவு நோட்டீஸ் வழங்கப்படுகிறது. இது குறித்து தலைமை அர்ச்சகராக இருந்த ரமண தீட்சிதலு கூறியதாவது:-
கடந்த 1996-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு திருப்பதி கோவிலில் வாரிசு அர்ச்சகர் பணி நியமனத்தை ரத்து செய்தது. ஆனால் அதற்காக இயற்றப்பட்ட சட்டப்பிரிவு 144-ன்படி அவர்களின் பணிக்கும், அவர்களுக்கு கிடைக்கும் சம்பாவனை, மரியாதைக்கு எந்தவித குறையும் இருக்கக்கூடாது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அர்ச்சகர்கள் முதுமையில் தங்களை காத்து கொள்ள ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கூறி உள்ளது. ஆனால் அர்ச்சகர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் உரிய மரியாதையை அளிக்கவில்லை. பூஜை கைங்கர்யங்களை விரைவில் செய்யுமாறு வற்புறுத்துகின்றனர். இதனால் ஏழுமலையான் கைங்கர்யங்களில் குறைபாடு ஏற்படுகிறது.
இதுபற்றி நான் வெளியில் கூறியதால், அர்ச்சகர்களுக்கு ஓய்வு பெறும் வயது உச்ச வரம்பை 65 வயதுக்கு நிர்ணயித்த உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டு ஏற்படுத்திய சட்டப்பிரிவின்படி தேவஸ்தான அர்ச்சகர்களுக்கு ஓய்வு பெறும் வயது உச்சவரம்பை நிர்ணயிக்க கூடாது. எனவே இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வேன் என்றார்.
திருப்பதி கோவில் புதிய தலைமை அர்ச்சகராக கொல்லப்பள்ளி குடும்பத்தை சேர்ந்த வேணு கோபால் தீட்சிதலு நியமிக்கப்பட்டார். மேலும் தலைமை அர்ச்சகர்களை பைடிபள்ளி குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ண சேஷாசல் தீட்சிதலு, பெத்திண்ட்டி குடும்பத்தை சேர்ந்த சீனிவாச தீட்சிதலு, திருப்பதி அம்மா குடும்பத்தை சேர்ந்த கோவிந்தராசு தீட்சிதலு ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில் அர்ச்சகர் பணியில் இருந்த 32 பேரை பணி நிரந்தரம் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X