என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சந்திரயான்-2 விண்கலம் நிலவுக்கு ஏவப்படுகிறது
மும்பை:
இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந்தேதி ‘சந்திரயான்-1’ விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.
நிலவில் நிலை நிறுத்தப்பட்ட சந்திரயான் விண்கலம் தனது ஆய்வுப் பணியை தொடங்கி தகவல்களை அனுப்பியது. இது இஸ்ரோவின் பெரும் சாதனையாகும்.
இதன் மூலம் ‘சந்திரயான்-2’ விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப விஞ்ஞானிகள் முடிவு செய்து அதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
‘சந்திராயன்-2’ விண்கலம் வடிவமைக்கப்பட்டு வருகிற ஏப்ரல் மாதம் நிலவுக்கு ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏப்ரல் மாதம் ஏவப்படும் என்று மூத்த விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர்.
ஆனால் தற்போது விண்கலம் ஏவப்படுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. ஏப்ரலில் ஏவப்படுவதற்கான தயார் நிலையில் விண்கலம் இல்லை. இன்னும் அதில் ஏற்பாடுகள் செய்ய வேண்டியது உள்ளது.
இதனால் ‘சந்திரயான்-2’ அக்டோபர் மாதம் நிலவுக்கு ஏவப்படுகிறது. ‘சந்திரயான்-2’ நிலவில் நிலை நிறுத்தப்பட்டதும் நிலவின் தென் பகுதியில் தரை இறக்கப்பட்ட முதல் விண்கலம் என்ற சிறப்பை பெறும்.
இதுகுறித்து இஸ்ரோ மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், சந்திரயான்-2 விண்கலத்தில் பல கட்ட சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் நாங்கள் அவசரப்பட விரும்பவில்லை என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்