என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகாரில் புதிதாக திறக்கப்பட இருந்த அணையில் திடீர் உடைப்பு: முதல் மந்திரி வருகை ரத்து
Byமாலை மலர்20 Sep 2017 6:33 AM GMT (Updated: 20 Sep 2017 6:33 AM GMT)
பீகார் மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் புதிதாக திறக்கப்பட்ட அணையின் ஒரு பகுதி திடீரென உடைந்தது. இதனால் முதல் மந்திரி நிதிஷ்குமர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலம் பாகல்பூரில் சுற்றுவட்டார கிராமங்கள் விவசாயத்துக்காக நீரை பெறவும், நீர் மின்சாரம் தயாரிக்கும் வகையிலும் சுமார் 389 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நீர்த்தேக்க அணை கட்டப்பட்டு வந்தது. இந்த அணையின் திறப்பு விழா இன்று நடைபெற இருந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி நிதிஷ்குமார் இன்று கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே, பீகார் மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததுள்ளது.
இந்நிலையில், பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாகல்பூரின் அருகில் உள்ள கஹல்கான் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அணையின் ஒரு பகுதியில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியை சுற்றிலும் வெள்ள நீர் ஆறாக ஓடியது.
இதைதொடர்ந்து, அரசு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அணை உடைப்பால் மேலும் பாதிப்பு வராமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அணையில் உடைப்பு ஏற்பட்டதால் முதல் மந்திரி நிதிஷ்குமார் வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பீகார் மாநிலம் பாகல்பூரில் சுற்றுவட்டார கிராமங்கள் விவசாயத்துக்காக நீரை பெறவும், நீர் மின்சாரம் தயாரிக்கும் வகையிலும் சுமார் 389 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நீர்த்தேக்க அணை கட்டப்பட்டு வந்தது. இந்த அணையின் திறப்பு விழா இன்று நடைபெற இருந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி நிதிஷ்குமார் இன்று கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே, பீகார் மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததுள்ளது.
இந்நிலையில், பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாகல்பூரின் அருகில் உள்ள கஹல்கான் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அணையின் ஒரு பகுதியில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியை சுற்றிலும் வெள்ள நீர் ஆறாக ஓடியது.
இதைதொடர்ந்து, அரசு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அணை உடைப்பால் மேலும் பாதிப்பு வராமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அணையில் உடைப்பு ஏற்பட்டதால் முதல் மந்திரி நிதிஷ்குமார் வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X