என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெட் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும்: பல்கலைக்கழக மானியக்குழு தகவல்
Byமாலை மலர்27 April 2017 2:23 AM GMT (Updated: 27 April 2017 2:23 AM GMT)
இளநிலை ஆராய்ச்சியாளர், உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் எனவும் இந்த தேர்வை சி.பி.எஸ்.இ., நடத்தும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு நேற்று தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
இளநிலை ஆராய்ச்சியாளர், உதவி பேராசிரியர் பணி தகுதி பெற விரும்புவோருக்கு, ‘நெட்’ என்னும் தேசிய தகுதித்தேர்வு ஆண்டுதோறும் ஜூலை மாதமும், டிசம்பர் மாதமும் நடத்தப்படுகிறது.
ஆனால் பணி நெருக்கடி காரணமாக இந்த தேர்வை தம்மால் நடத்த முடியாது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தை சி.பி.எஸ்.இ., கடந்த ஆண்டு அணுகி தெரிவித்தது.
இதன்காரணமாக ‘நெட்’ தேர்வு இந்த ஆண்டு நடத்தப்படுவது பற்றி நிச்சயமற்ற தன்மை நிலவி வந்தது.
இந்த நிலையில் வழக்கத்தின்படியே இந்த ஆண்டும் ஜூலை மாதம் நெட் தேர்வு நடைபெறும், இந்த தேர்வை சி.பி.எஸ்.இ., நடத்தும் என பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) நேற்று தெரிவித்துள்ளது.
என்.டி.எஸ். என்னும் தேசிய தேர்வு பணி மையத்தை மத்திய அரசு அமைக்கிற வரையில், இந்த ஏற்பாடு தொடரும் என தகவல்கள் கூறுகின்றன.
மேலும், ‘நெட்’ தேர்வு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சி.பி.எஸ்.இ. வெளியிடும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு கூறியுள்ளது.
இளநிலை ஆராய்ச்சியாளர், உதவி பேராசிரியர் பணி தகுதி பெற விரும்புவோருக்கு, ‘நெட்’ என்னும் தேசிய தகுதித்தேர்வு ஆண்டுதோறும் ஜூலை மாதமும், டிசம்பர் மாதமும் நடத்தப்படுகிறது.
ஆனால் பணி நெருக்கடி காரணமாக இந்த தேர்வை தம்மால் நடத்த முடியாது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தை சி.பி.எஸ்.இ., கடந்த ஆண்டு அணுகி தெரிவித்தது.
இதன்காரணமாக ‘நெட்’ தேர்வு இந்த ஆண்டு நடத்தப்படுவது பற்றி நிச்சயமற்ற தன்மை நிலவி வந்தது.
இந்த நிலையில் வழக்கத்தின்படியே இந்த ஆண்டும் ஜூலை மாதம் நெட் தேர்வு நடைபெறும், இந்த தேர்வை சி.பி.எஸ்.இ., நடத்தும் என பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) நேற்று தெரிவித்துள்ளது.
என்.டி.எஸ். என்னும் தேசிய தேர்வு பணி மையத்தை மத்திய அரசு அமைக்கிற வரையில், இந்த ஏற்பாடு தொடரும் என தகவல்கள் கூறுகின்றன.
மேலும், ‘நெட்’ தேர்வு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சி.பி.எஸ்.இ. வெளியிடும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு கூறியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X