என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரி குஜராத் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமனம்
Byமாலை மலர்26 April 2017 9:28 AM GMT (Updated: 26 April 2017 9:28 AM GMT)
ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரி அசோக் கேலாட் குஜராத் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த மாநிலமான குஜராத் சட்டசபைக்கு வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருந்து வருகிறது. இந்நிலையில், சந்திக்கவுள்ள கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தீவிரம் காட்டி வருகிறார்.
இதன் முதல்கட்டமாக, முன்னர் இருந்த மாநில நிர்வாகிகளை மாற்றி, சமீபத்தில் புதிய நபர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரி அசோக் கேலாட் குஜராத் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராக (பொறுப்பு) இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘குஜராத்தில் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் விதமாக அசோக் கேலாட்டின் மேற்பார்வையின்கீழ், முன்னர் நியமிக்கப்பட்ட 4 செயலாளர்களும் இயங்குவார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த மாநிலமான குஜராத் சட்டசபைக்கு வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருந்து வருகிறது. இந்நிலையில், சந்திக்கவுள்ள கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தீவிரம் காட்டி வருகிறார்.
இதன் முதல்கட்டமாக, முன்னர் இருந்த மாநில நிர்வாகிகளை மாற்றி, சமீபத்தில் புதிய நபர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரி அசோக் கேலாட் குஜராத் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராக (பொறுப்பு) இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘குஜராத்தில் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் விதமாக அசோக் கேலாட்டின் மேற்பார்வையின்கீழ், முன்னர் நியமிக்கப்பட்ட 4 செயலாளர்களும் இயங்குவார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X