என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு
Byமாலை மலர்28 March 2017 2:30 PM GMT (Updated: 28 March 2017 2:30 PM GMT)
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் 15 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. பல்வேறு வழிகளில் விவசாயிகள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தை தொடர்கின்றனர்.
போராடும் விவசாயிகளுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இன்று மத்திய மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, அவர்களுடன் தி.மு.க. எம்.பி.யான திருச்சி சிவாவும் சென்றிருந்தார்.
இந்நிலையில், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விவசாயிகளுடன் சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். அப்போது, விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை தீர்க்கக் கோரி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மனு அளித்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் 15 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. பல்வேறு வழிகளில் விவசாயிகள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தை தொடர்கின்றனர்.
போராடும் விவசாயிகளுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இன்று மத்திய மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, அவர்களுடன் தி.மு.க. எம்.பி.யான திருச்சி சிவாவும் சென்றிருந்தார்.
இந்நிலையில், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விவசாயிகளுடன் சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். அப்போது, விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை தீர்க்கக் கோரி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மனு அளித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X