என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீரபத்ர சுவாமிக்கு தங்கத்திலான மீசை - தெலுங்கானா முதல்வர் காணிக்கை
Byமாலை மலர்24 Feb 2017 5:19 AM GMT (Updated: 24 Feb 2017 5:19 AM GMT)
தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதற்கு நேர்த்திக்கடனாக முதல்மந்திரி சந்திரசேகர ராவ் அங்குள்ள புகழ் பெற்ற வீரபத்ர சுவாமி கோவிலுக்கு தங்கத்திலான மீசையை காணிக்கையாக வழங்குகிறார்.
ஐதராபாத்:
ஒருங்கினைந்த ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கக் கோரி கடும் போராட்டங்கள் நடத்திய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ், தனது போராட்டம் வெற்றி பெற்றால் மஹபுபாபாத் மாவட்டம் குராவி அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆன்மீக தளமான வீரபத்ர சுவாமி கோயிலில் உள்ள மூலவரான வீரபத்ர சுவாமிக்கு தங்கத்திலான மீசையை காணிக்கையாக செலுத்துவதாக வேண்டியிருந்தார்.
இதையடுத்து, 2014-ம் ஆண்டில் தெலுங்கானா தனி மாநிலமாக உருவெடுத்தது. அதே ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலிலும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் முதல்மந்திரியாக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், தனது வேண்டுதலின் படி வீரபத்ர சுவாமி கோயிலில் உள்ள மூலவரான வீரபத்ர சுவாமிக்கு சுமார் 75,000 ரூபாய் மதிப்புடைய தங்கத்திலான மீசையை காணிக்கையாக சந்திரசேகர ராவ் விரைவில் வழங்க உள்ளார்.
ஒருங்கினைந்த ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கக் கோரி கடும் போராட்டங்கள் நடத்திய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ், தனது போராட்டம் வெற்றி பெற்றால் மஹபுபாபாத் மாவட்டம் குராவி அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆன்மீக தளமான வீரபத்ர சுவாமி கோயிலில் உள்ள மூலவரான வீரபத்ர சுவாமிக்கு தங்கத்திலான மீசையை காணிக்கையாக செலுத்துவதாக வேண்டியிருந்தார்.
இதையடுத்து, 2014-ம் ஆண்டில் தெலுங்கானா தனி மாநிலமாக உருவெடுத்தது. அதே ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலிலும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் முதல்மந்திரியாக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், தனது வேண்டுதலின் படி வீரபத்ர சுவாமி கோயிலில் உள்ள மூலவரான வீரபத்ர சுவாமிக்கு சுமார் 75,000 ரூபாய் மதிப்புடைய தங்கத்திலான மீசையை காணிக்கையாக சந்திரசேகர ராவ் விரைவில் வழங்க உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X