என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: பீட்டா திடீர் அறிவிப்பு
Byமாலை மலர்21 Feb 2017 12:23 PM GMT (Updated: 21 Feb 2017 12:23 PM GMT)
தமிழ்நாட்டில் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு மற்றும் கர்நாடக மாநில அரசால் மீண்டும் அனுமதிக்கப்பட்ட கம்பளா போட்டிகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என பீட்டா அமைப்பு இன்று குறிப்பிட்டுள்ளது.
புதுடெல்லி:
தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் அனுமதிக்கும் தீர்மானத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் நிறைவேற்றியது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலை பெற்ற இந்த தீர்மானம் சட்ட வடிவம் பெற்று, மத்திய அரசின் அறிவிக்கையாகவும் வெளியானது.
தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடக மாநில அரசும் எருமை மாடுகளை கட்டியிருக்கும் கயிற்றை பிடித்தபடி சகதியில் ஓடும் பாரம்பரியமிக்க ‘கம்பளா’ விளையாட்டை மீண்டும் நடத்த வகை செய்யும் அவசர சட்ட மசோதா அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையே, முன்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, சாதகமான தீர்ப்பை பெற்ற பீட்டா என்ற விலங்குகள் நல அமைப்பு இவ்விவகாரத்தில் வழக்கு ஏதும் தொடராமல் மவுனம் காத்து வந்தது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு மற்றும் கம்பளா போட்டிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கும் சட்டத்தை எதிர்த்து இன்னும் சில நாட்களில் வழக்கு தொடருவோம் என்று பீட்டா அமைப்பை சேர்ந்த மணிலால் வல்லியாட்டே என்பவர் இன்று தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு மற்றும் கம்பளா ஆகியவற்றை ஒரே மனுவின் மூலம் எதிர்த்து வழக்கு தொடர்வதா? அல்லது, தனித்தனியாக வழக்கு போடுவதா? என்பது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் அனுமதிக்கும் தீர்மானத்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் நிறைவேற்றியது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலை பெற்ற இந்த தீர்மானம் சட்ட வடிவம் பெற்று, மத்திய அரசின் அறிவிக்கையாகவும் வெளியானது.
தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடக மாநில அரசும் எருமை மாடுகளை கட்டியிருக்கும் கயிற்றை பிடித்தபடி சகதியில் ஓடும் பாரம்பரியமிக்க ‘கம்பளா’ விளையாட்டை மீண்டும் நடத்த வகை செய்யும் அவசர சட்ட மசோதா அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையே, முன்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, சாதகமான தீர்ப்பை பெற்ற பீட்டா என்ற விலங்குகள் நல அமைப்பு இவ்விவகாரத்தில் வழக்கு ஏதும் தொடராமல் மவுனம் காத்து வந்தது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு மற்றும் கம்பளா போட்டிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கும் சட்டத்தை எதிர்த்து இன்னும் சில நாட்களில் வழக்கு தொடருவோம் என்று பீட்டா அமைப்பை சேர்ந்த மணிலால் வல்லியாட்டே என்பவர் இன்று தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு மற்றும் கம்பளா ஆகியவற்றை ஒரே மனுவின் மூலம் எதிர்த்து வழக்கு தொடர்வதா? அல்லது, தனித்தனியாக வழக்கு போடுவதா? என்பது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X