என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவதூறு வழக்கில் கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜராக நிரந்தர விலக்கு: ஐகோர்ட்டு உத்தரவு
Byமாலை மலர்6 Dec 2016 9:15 PM GMT (Updated: 6 Dec 2016 9:15 PM GMT)
அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணை கோர்ட்டில் ஆஜராக நிரந்தர விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
புதுடெல்லி:
முன்னாள் மத்திய மந்திரி கபில் சிபலின் மகனும் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வக்கீலுமான அமித் சிபல் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது தொடர்ந்து உள்ள அவதூறு வழக்கு விசாரணை டெல்லி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜர் ஆவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக்கோரி கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று ஐகோர்ட்டு நீதிபதி முக்தா குப்தாவின் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணை கோர்ட்டில் ஆஜராக நிரந்தர விலக்கு அளித்து உத்தரவிட்டார்.
இருப்பினும், கெஜ்ரிவால் ஆஜராகமல் இருக்கும் பட்சத்தில் வழக்கு தாமதமாகும் என்கிற போது விசாரணை கோர்ட்டு இந்த உத்தரவை மாற்றியமைத்துக்கொள்ளலாம் என்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் கெஜ்ரிவாலை விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தலாம் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.
முன்னாள் மத்திய மந்திரி கபில் சிபலின் மகனும் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வக்கீலுமான அமித் சிபல் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது தொடர்ந்து உள்ள அவதூறு வழக்கு விசாரணை டெல்லி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜர் ஆவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக்கோரி கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று ஐகோர்ட்டு நீதிபதி முக்தா குப்தாவின் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணை கோர்ட்டில் ஆஜராக நிரந்தர விலக்கு அளித்து உத்தரவிட்டார்.
இருப்பினும், கெஜ்ரிவால் ஆஜராகமல் இருக்கும் பட்சத்தில் வழக்கு தாமதமாகும் என்கிற போது விசாரணை கோர்ட்டு இந்த உத்தரவை மாற்றியமைத்துக்கொள்ளலாம் என்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் கெஜ்ரிவாலை விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தலாம் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X