என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் முன்னாள் எம்.பி., பிரபல கவிஞர் பேக்கல் உட்சாஹி மரணம்
Byமாலை மலர்3 Dec 2016 9:02 AM GMT (Updated: 3 Dec 2016 9:02 AM GMT)
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன் நெருக்கமான அரசியல் தொடர்பு வைத்திருந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும் பிரபல கவிஞருமான பேக்கல் உட்சாஹி மரணம் அடைந்தார்.
புதுடெல்லி:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பிரபல கவிஞரான பேக்கல் உட்சாஹி, ஒருமுறை காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்துக்காக இங்குவந்த பண்டிதர் ஜவஹர்லால் நேருவை வானளாவ புகழ்ந்து கவிதை பாடியதன் மூலம் அவரது நன்மதிப்பை பெற்றார். பல்வேறு ‘கஸல்’ இசைப் பாடல்களையும் இயற்றிய இவர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன் நெருக்கமான அரசியல் தொடர்பு வைத்திருந்தார்.
பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக பொறுப்பேற்ற இவர் பிரதமர் தலைமையிலான தேசிய ஒருமைப்பாட்டு குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு விருதுகளை பெற்ற இவருக்கு கடந்த 1976-ம் ஆண்டு இலக்கியத்துக்கான ‘பத்மஸ்ரீ’ விருதை மத்திய அரசு வழங்கி கவுரவித்தது.
சமீபகாலமாக, மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில் டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரியில் கடந்த 1-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பேக்கல் உட்சாஹி(88), சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பிரபல கவிஞரான பேக்கல் உட்சாஹி, ஒருமுறை காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்துக்காக இங்குவந்த பண்டிதர் ஜவஹர்லால் நேருவை வானளாவ புகழ்ந்து கவிதை பாடியதன் மூலம் அவரது நன்மதிப்பை பெற்றார். பல்வேறு ‘கஸல்’ இசைப் பாடல்களையும் இயற்றிய இவர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன் நெருக்கமான அரசியல் தொடர்பு வைத்திருந்தார்.
பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக பொறுப்பேற்ற இவர் பிரதமர் தலைமையிலான தேசிய ஒருமைப்பாட்டு குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு விருதுகளை பெற்ற இவருக்கு கடந்த 1976-ம் ஆண்டு இலக்கியத்துக்கான ‘பத்மஸ்ரீ’ விருதை மத்திய அரசு வழங்கி கவுரவித்தது.
சமீபகாலமாக, மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில் டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரியில் கடந்த 1-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பேக்கல் உட்சாஹி(88), சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X