என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறிய 27 வங்கி அதிகாரிகள் சஸ்பெண்ட்: நிதித்துறை அமைச்சகம்
Byமாலை மலர்2 Dec 2016 2:31 PM GMT (Updated: 2 Dec 2016 2:31 PM GMT)
பணப் பரிவர்த்தனையில் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறியதாக 27 வங்கி அதிகாரிகளை நிதித்துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்துள்ளது.
புது டெல்லி:
ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த அறிவிப்பிற்குப் பின் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. பலர் பினாமி பெயர்களில் பணத்தை டெபாசிட் செய்வதாகவும், இந்த முறையற்ற பரிவர்த்தனைக்கு வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் பணப் பரிவர்த்தனையில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதாக 27 வங்கி அதிகாரிகளை இடை நீக்கம் செய்திருப்பதாக நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "பல்வேறு பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த 27 அதிகாரிகள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 6 வங்கி அதிகாரிகள் முக்கியத்துவம் இல்லாத இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனையில் இதுவரை ரூ.152 கோடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறிப்பாக பெங்களூரில் நேற்று நடைபெற்ற சோதனையில் ரூ.5.7 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த அறிவிப்பிற்குப் பின் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. பலர் பினாமி பெயர்களில் பணத்தை டெபாசிட் செய்வதாகவும், இந்த முறையற்ற பரிவர்த்தனைக்கு வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் பணப் பரிவர்த்தனையில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதாக 27 வங்கி அதிகாரிகளை இடை நீக்கம் செய்திருப்பதாக நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "பல்வேறு பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த 27 அதிகாரிகள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 6 வங்கி அதிகாரிகள் முக்கியத்துவம் இல்லாத இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனையில் இதுவரை ரூ.152 கோடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறிப்பாக பெங்களூரில் நேற்று நடைபெற்ற சோதனையில் ரூ.5.7 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X