என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தானில் ரெயில் தடம் புரண்டு 12 பயணிகள் காயம்
Byமாலை மலர்19 Nov 2016 10:12 PM GMT (Updated: 21 Nov 2016 5:32 AM GMT)
ராஜியசார் பகுதியில் சென்ற போது ரெயிலின் 4 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளாயின. இந்த விபத்தில் 12 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.
பிகானிர்:
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் இருந்து ராஜஸ்தானின் ஜோத்பூர் செல்லும் பதிண்டா-ஜோத்பூர் பயணிகள் ரெயில் நேற்று அதிகாலையில் ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் சென்று கொண்டு இருந்தது. சுமார் 2 மணியளவில் ராஜியசார் பகுதியில் சென்ற போது ரெயிலின் 4 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளாயின. இந்த விபத்தில் 12 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.
ரெயில் தடம் புரண்ட தகவல் அறிந்ததும் அங்கு சென்ற ரெயில்வே உயர் அதிகாரிகளும், போலீசாரும் உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் காயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஜியனராம் மேற்பார்வையிட்டார்.
ரெயிலில் இருந்த பிற பயணிகள் சாலை வழியாக தங்கள் ஊருக்கு புறப்பட்டனர். இந்த விபத்தால் அந்த பாதையில் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஜம்முதாவி உள்ளிட்ட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் இருந்து ராஜஸ்தானின் ஜோத்பூர் செல்லும் பதிண்டா-ஜோத்பூர் பயணிகள் ரெயில் நேற்று அதிகாலையில் ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் சென்று கொண்டு இருந்தது. சுமார் 2 மணியளவில் ராஜியசார் பகுதியில் சென்ற போது ரெயிலின் 4 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளாயின. இந்த விபத்தில் 12 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.
ரெயில் தடம் புரண்ட தகவல் அறிந்ததும் அங்கு சென்ற ரெயில்வே உயர் அதிகாரிகளும், போலீசாரும் உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் காயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஜியனராம் மேற்பார்வையிட்டார்.
ரெயிலில் இருந்த பிற பயணிகள் சாலை வழியாக தங்கள் ஊருக்கு புறப்பட்டனர். இந்த விபத்தால் அந்த பாதையில் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஜம்முதாவி உள்ளிட்ட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X