என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பிளஸ்-1 மாணவியை கற்பழித்து எரித்து கொல்ல முயன்ற வாலிபர் கைது
திருவனந்தபுரம்:
களியக்காவிளையை அடுத்த பாறசாலை பகுதியைச் சேர்ந்தவர் விஜின் (வயது 23). இவர், அந்த பகுதியில் தனியாக வீடு எடுத்து பிளஸ்-1 மாணவி ஒருவருடன் குடித்தனம் நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவி தீக்காயங்களுடன் வீட்டின் பின் பகுதியில் உள்ளகிணற்றில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் மாணவியை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மாஜிஸ்திரேட்டும் மாணவி அனுமதிக்கப்பட்ட ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று வாக்குமூலம் பெற்றார்.
அதில், மாணவி தன்னை வாலிபர் விஜின் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். மேலும் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்ததால் விஜினுடன் தகராறு செய்ததாகவும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் விஜின் தன்னை எரித்துக் கொல்ல முயன்றதாகவும் கூறினார்.
மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜினை தேடி வந்தனர். நேற்று அவர், திருவனந்தபுரம் பகுதியில் மறைந்திருப்பது தெரிய வந்தது.
அவரை கைது செய்த போலீசார் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்