என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பள்ளி விழாவில் சந்திரபாபுநாயுடுவிடம் மாணவி லஞ்ச புகார்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
நகரி:
விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த டிஜிட்டல் வகுப்பறை திறக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் சந்திர பாபுநாயுடு பங்கேற்றார். வகுப்பறையை திறந்து வைத்து அவர் மாணவ- மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
மேலும் அவர்களின் கருத்துக்களையும் கேட்டு அறிந்தார். அப்போது சந்திர பாபுநாயுடுவிடம் ஒரு மாணவி பரபரப்பு குற்றச் சாட்டை கூறினார்.
லஞ்சம் காரணமாக எங்களால் உயர் படிப்பு படிக்க முடியவில்லை. எல்லா இடங்களிலும் லஞ்சம் உள்ளது. எல்லா விஷயங்களுக்கும் அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள்.
இங்குள்ள அதிகாரிகளில் கூட லஞ்சம் வாங்குபவர்கள் இருக்கிறார்கள். அதை தடுக்க வேண்டும் என்று கூறினார். முதல்வரிடம் மாணவி நேரடியாகவே லஞ்ச புகார் கூறியதால் பள்ளி விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த மாணவிக்கு பதில் அளித்த சந்திரபாபுநாயுடு, தற்போது தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இதன் மூலம் லஞ்சத்தை முற்றிலும் ஒழித்து விடலாம் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்