என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரசவ ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து கர்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவர் கைது
Byமாலை மலர்29 Sep 2016 5:07 AM GMT (Updated: 29 Sep 2016 5:07 AM GMT)
பிரசவ ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து கர்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது காயங்குளம். இங்கு அரசு ஆஸ்பத்திரி உள்ளது. அங்குள்ள பிரசவ வார்டு பகுதிக்கு நேற்று ஒருவர் வந்தார். அவரை தடுத்த நர்சு அவரிடம் விபரம் கேட்டார்.
அப்போது பிரசவ வார்டில் மின் வயர்கள் பழுதானதாக டாக்டர் கூறினார். அதனை சரிசெய்ய வந்துள்ளேன் என்று அவர் கூறினார். இதனை நம்பிய நர்சு அவரை பிரசவ வார்டுக்கு அழைத்துச்சென்றார்.
அப்போது நர்சிடம் நைசாக பேசிய நபர் நர்சை அங்கிருந்து அனுப்பி வைத்தார். பிரசவ வார்டில் உள்ள ஒரு தனி அறைக்கு சென்ற நபர் கதவை உள்பக்கமாக சாத்தினார். பின்னர் அங்கே தனியே இருந்த கர்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயன்றார்.
அதிர்ச்சியடைந்த கர்ப்பிணி அலறி சத்தம்போட்டார். அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் ஓடி வருவதை பார்த்த மர்மநபர் கதவை திறந்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட கர்ப்பிணி காயங்குளம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நடமாடினார். அவரது படத்தை காண்பித்து கேட்டபோது தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர் இவர் தான் என்று கர்ப்பிணி அடையாளம் காட்டினார். அவரது போட்டோவை வைத்து போலீசார் தீவிரமாக தேடினர்.
காயங்குளம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த அவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவர் கொல்லம் பகுதியை சேர்ந்த ஆண்ட்ரோஸ் (வயது 60) என்பது தெரியவந்தது.
முதியவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது காயங்குளம். இங்கு அரசு ஆஸ்பத்திரி உள்ளது. அங்குள்ள பிரசவ வார்டு பகுதிக்கு நேற்று ஒருவர் வந்தார். அவரை தடுத்த நர்சு அவரிடம் விபரம் கேட்டார்.
அப்போது பிரசவ வார்டில் மின் வயர்கள் பழுதானதாக டாக்டர் கூறினார். அதனை சரிசெய்ய வந்துள்ளேன் என்று அவர் கூறினார். இதனை நம்பிய நர்சு அவரை பிரசவ வார்டுக்கு அழைத்துச்சென்றார்.
அப்போது நர்சிடம் நைசாக பேசிய நபர் நர்சை அங்கிருந்து அனுப்பி வைத்தார். பிரசவ வார்டில் உள்ள ஒரு தனி அறைக்கு சென்ற நபர் கதவை உள்பக்கமாக சாத்தினார். பின்னர் அங்கே தனியே இருந்த கர்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயன்றார்.
அதிர்ச்சியடைந்த கர்ப்பிணி அலறி சத்தம்போட்டார். அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் ஓடி வருவதை பார்த்த மர்மநபர் கதவை திறந்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட கர்ப்பிணி காயங்குளம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நடமாடினார். அவரது படத்தை காண்பித்து கேட்டபோது தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர் இவர் தான் என்று கர்ப்பிணி அடையாளம் காட்டினார். அவரது போட்டோவை வைத்து போலீசார் தீவிரமாக தேடினர்.
காயங்குளம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த அவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவர் கொல்லம் பகுதியை சேர்ந்த ஆண்ட்ரோஸ் (வயது 60) என்பது தெரியவந்தது.
முதியவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X