என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இஸ்லாமாபாத் சார்க் மாநாடு கடைசி நேரத்தில் ரத்து?
Byமாலை மலர்28 Sep 2016 12:31 PM GMT (Updated: 28 Sep 2016 12:31 PM GMT)
இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் புறக்கணித்ததையடுத்து இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த சார்க் மாநாடு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுடெல்லி:
சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் 19-வது மாநாடு வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது.
நவம்பர் 9, 10-ந்தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் தீவிரமாக செய்து வருகிறது. இஸ்லாமாபாத்தில் மாநாடு நடக்கும் அரங்கில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், சார்க் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இந்த தகவல் நேபாளத்தில் உள்ள சார்க் அமைப்பின் தலைமையகத்திற்கு இந்திய அரசின்சார்பில் கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவை தொடர்ந்து, பூடான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் இஸ்லாமாபாத் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், மொத்தமுள்ள 8 நாடுகளில் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் புறக்கணித்ததால் சார்க் மாநாடு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சார்க் மாநாட்டின் நடைமுறைப்படி அமைப்பில் உள்ள ஒரு நாடு கலந்து கொள்ளவில்லை என்றாலும், நிகழ்வு தள்ளி வைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.
இருப்பினும், நியூயாக்கில் இருக்கும் சார்க் அமைப்பின் பொது செயலாளர் பகதூர் தபா நேபாளம் திரும்பியதும் அதிகாரப்பூர்வ முடிவு இரு தினங்களில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
முன்னதாக இந்தியா இல்லை என்றால் நாங்களும் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்று இலங்கை தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் 19-வது மாநாடு வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது.
நவம்பர் 9, 10-ந்தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் தீவிரமாக செய்து வருகிறது. இஸ்லாமாபாத்தில் மாநாடு நடக்கும் அரங்கில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், சார்க் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இந்த தகவல் நேபாளத்தில் உள்ள சார்க் அமைப்பின் தலைமையகத்திற்கு இந்திய அரசின்சார்பில் கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவை தொடர்ந்து, பூடான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் இஸ்லாமாபாத் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், மொத்தமுள்ள 8 நாடுகளில் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் புறக்கணித்ததால் சார்க் மாநாடு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சார்க் மாநாட்டின் நடைமுறைப்படி அமைப்பில் உள்ள ஒரு நாடு கலந்து கொள்ளவில்லை என்றாலும், நிகழ்வு தள்ளி வைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.
இருப்பினும், நியூயாக்கில் இருக்கும் சார்க் அமைப்பின் பொது செயலாளர் பகதூர் தபா நேபாளம் திரும்பியதும் அதிகாரப்பூர்வ முடிவு இரு தினங்களில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
முன்னதாக இந்தியா இல்லை என்றால் நாங்களும் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்று இலங்கை தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X