என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் நாட்டு சுற்றுலா பயணிகளை இந்தியா வரவேற்கிறது: மத்திய மந்திரி மகேஷ் சர்மா
Byமாலை மலர்27 Sep 2016 2:31 PM GMT (Updated: 27 Sep 2016 2:31 PM GMT)
பாகிஸ்தான் நாட்டில் இருந்து சுற்றுலா பயணிகளை இந்தியா வரவேற்பதாக மத்திய மந்திரி மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
உரி பயங்கரவாத தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டில் இருந்து சுற்றுலா பயணிகளை இந்தியா வரவேற்பதாக மத்திய கலாச்சாரத்துறை மந்திரி மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது இதனை அவர் தெரிவித்தார்.
மேலும் மகேஷ் சர்மா பேசியதாவது:-
இந்தியா ஒரு மாறுபட்ட நாடு. உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகளை நாங்கள் வரவேற்கிறோம்.
அதிக அளவிலான அயல்நாட்டினர் இங்குள்ள பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு வருவதன் மூலம் பெருமைமிகு இந்தியா என்பதை நம் நாடு தன்னகத்தே நிரூபித்துள்ளது.
இந்தியா வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் தூய்மையான மற்றும் பாதுகாப்பான சுற்றுலா அனுபவம் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உரி பயங்கரவாத தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டில் இருந்து சுற்றுலா பயணிகளை இந்தியா வரவேற்பதாக மத்திய கலாச்சாரத்துறை மந்திரி மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது இதனை அவர் தெரிவித்தார்.
மேலும் மகேஷ் சர்மா பேசியதாவது:-
இந்தியா ஒரு மாறுபட்ட நாடு. உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகளை நாங்கள் வரவேற்கிறோம்.
அதிக அளவிலான அயல்நாட்டினர் இங்குள்ள பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு வருவதன் மூலம் பெருமைமிகு இந்தியா என்பதை நம் நாடு தன்னகத்தே நிரூபித்துள்ளது.
இந்தியா வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் தூய்மையான மற்றும் பாதுகாப்பான சுற்றுலா அனுபவம் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X