என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வண்ணாரப்பேட்டையில் 5 ரூபாய் டாக்டரின் ஆஸ்பத்திரியை தொடர்ந்து நடத்தும் குடும்பம்- இலவச சிகிச்சை
Byமாலை மலர்27 March 2019 10:37 AM GMT (Updated: 27 March 2019 11:18 AM GMT)
சென்னை வண்ணாரப்பேட்டையில் வெறும் 5 ரூபாய் கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளித்து வந்த டாக்டர் ஜெயச்சந்திரன் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் கட்டணம் எதுவும் நிர்ணயிக்காமல் சிகிச்சை அளிக்கின்றனர். #DoctorJayaChandran #5rsdoctor
சென்னை:
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, வெங்கடாசலபதி தெருவில் உள்ள டாக்டர் ஜெயச்சந்திரன் ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் சுமார் 30 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்தார்.
அந்த பகுதியில் உள்ள காசிமேடு, கொடுங்கையூர் பகுதி மக்கள் இந்த ஆஸ்பத்திரியில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை பெற்று வந்தார்கள்.
ஆரம்பத்தில் டாக்டர் ஜெயச்சந்திரன் ரூ.2 கட்டணம் வசூலித்தார். அதன்பிறகு அதை ரூ.5 உயர்த்தினார். கடைசி காலத்தில் ரூ.10-க்கு சிகிச்சை அளித்தார்.
அவர் முதலில் ரூ.2 கட்டணத்தில் சிகிச்சை அளித்ததால் அவரை 2 ரூபாய் டாக்டர் என்று அந்த பகுதி மக்கள் அழைத்து வந்தனர்.
தனது வாழ்நாள் முழுவதும் இவ்வாறு ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிப்பதை கொள்கையாக கொண்ட அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந்தேதி மரணம் அடைந்தார்.
அவரது மரணம் அந்த பகுதி மக்களை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி ஊர்வலத்திலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த விஷயம் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் அவரது சேவையை மேற்கோள் காட்டி இரங்கல் தெரிவித்து இருந்தனர்.
டாக்டர் ஜெயராமன் மறைந்து விட்டதால் அந்த ஆஸ்பத்திரி இனி செயல்படாது என்று எதிர் பார்க்கப்பட்டது.
ஆனால் அவரது குடும்பத்தினர் மீண்டும் ஆஸ்பத்திரியை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
டாக்டர் ஜெயராமனின் மனைவி வேணியும் டாக்டர் ஆவார். இவர்களுக்கு சரவணன், சரத் ராஜ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களும் டாக்டர்கள் ஆவர்.
அவர்கள் 3 பேரும் ஆஸ்பத்திரியை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். டாக்டர் ஜெயச்சந்திரன் இருந்தவரை குறைந்த கட்டணம் பெற்று சிகிச்சை அளித்தார். இப்போது இவர்களும் அதே நடைமுறையை பின்பற்றுகிறார்கள்.
டாக்டர் ஜெயச்சந்திரன் குறிப்பிட்ட குறைந்த கட்டணத்தை பெற்றுவந்தார். ஆனால் இவர்கள் கட்டணம் எதுவும் கேட்பதில்லை. அதற்கு பதிலாக அவர்கள் விரும்பிய பணத்தை அங்கு வைக்கப்பட்டுள்ள டாக்டர் ஜெயச்சந்திரன் படத்தின் முன்பு வைத்துவிட்டு செல்லும்படி கூறுகிறார்கள். நோயாளிகள் தங்களால் இயன்றபடி 3 ரூபாயோ அல்லது 5 ரூபாயோ வைத்துவிட்டு செல்கிறார்கள்.
டாக்டர் ஜெயச்சந்திரனின் மனைவி வேணி ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். மகன் சரத் ராஜ் சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றிவருகிறார்.
இதுதொடர்பாக வேணி கூறும்போது, ‘நாங்கள் ஏற்கனவே எனது கணவரோடு சிகிச்சைகளும் மேற்கொள்வோம். அவரது பணியை தொடரவேண்டும் என்று முடிவு எடுத்து நாங்கள் 3 பேரும் இப்போது சிகிச்சை அளித்து வருகிறோம்.
இந்த பகுதி ஏழை மக்கள் ஜெயச்சந்திரன் இருந்தபோது பயன்பெற்றது போலவே இப்போதும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த முடிவை எடுத்துள்ளோம்’ எனது கணவர் இருந்தபோது தினமும் 200 நோயாளிகள் வரை சிகிச்சை பெற்று செல்வார்கள். இப்போது 30 பேர் வரை வருகிறார்கள்’ என்று கூறினார்.
டாக்டர் சரத் ராஜ் கூறும்போது, ‘எங்கள் தந்தை இறந்த போது வந்த மக்களை பார்த்து நாங்கள் உணர்ச்சி வசப்பட்டோம். இதனால் அவர்களுக்கு எங்களது சேவை தொடரவேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்தது’ என்று கூறினார்.
இந்த ஆஸ்பத்திரி தினமும் காலையில் 9.30 மணியில் இருந்து இரவு 9.30 மணிவரை 12 மணிநேரம் செயல்படுகிறது. காலையில் டாக்டர் வேணி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். மற்ற நேரங்களில் இரு மகன்களில் யாராவது ஒருவர் சிகிச்சை அளிக்கின்றனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, வெங்கடாசலபதி தெருவில் உள்ள டாக்டர் ஜெயச்சந்திரன் ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் சுமார் 30 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்தார்.
அந்த பகுதியில் உள்ள காசிமேடு, கொடுங்கையூர் பகுதி மக்கள் இந்த ஆஸ்பத்திரியில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை பெற்று வந்தார்கள்.
ஆரம்பத்தில் டாக்டர் ஜெயச்சந்திரன் ரூ.2 கட்டணம் வசூலித்தார். அதன்பிறகு அதை ரூ.5 உயர்த்தினார். கடைசி காலத்தில் ரூ.10-க்கு சிகிச்சை அளித்தார்.
அவர் முதலில் ரூ.2 கட்டணத்தில் சிகிச்சை அளித்ததால் அவரை 2 ரூபாய் டாக்டர் என்று அந்த பகுதி மக்கள் அழைத்து வந்தனர்.
தனது வாழ்நாள் முழுவதும் இவ்வாறு ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிப்பதை கொள்கையாக கொண்ட அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந்தேதி மரணம் அடைந்தார்.
அவரது மரணம் அந்த பகுதி மக்களை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி ஊர்வலத்திலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த விஷயம் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் அவரது சேவையை மேற்கோள் காட்டி இரங்கல் தெரிவித்து இருந்தனர்.
டாக்டர் ஜெயராமன் மறைந்து விட்டதால் அந்த ஆஸ்பத்திரி இனி செயல்படாது என்று எதிர் பார்க்கப்பட்டது.
ஆனால் அவரது குடும்பத்தினர் மீண்டும் ஆஸ்பத்திரியை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
டாக்டர் ஜெயராமனின் மனைவி வேணியும் டாக்டர் ஆவார். இவர்களுக்கு சரவணன், சரத் ராஜ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களும் டாக்டர்கள் ஆவர்.
அவர்கள் 3 பேரும் ஆஸ்பத்திரியை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். டாக்டர் ஜெயச்சந்திரன் இருந்தவரை குறைந்த கட்டணம் பெற்று சிகிச்சை அளித்தார். இப்போது இவர்களும் அதே நடைமுறையை பின்பற்றுகிறார்கள்.
டாக்டர் ஜெயச்சந்திரன் குறிப்பிட்ட குறைந்த கட்டணத்தை பெற்றுவந்தார். ஆனால் இவர்கள் கட்டணம் எதுவும் கேட்பதில்லை. அதற்கு பதிலாக அவர்கள் விரும்பிய பணத்தை அங்கு வைக்கப்பட்டுள்ள டாக்டர் ஜெயச்சந்திரன் படத்தின் முன்பு வைத்துவிட்டு செல்லும்படி கூறுகிறார்கள். நோயாளிகள் தங்களால் இயன்றபடி 3 ரூபாயோ அல்லது 5 ரூபாயோ வைத்துவிட்டு செல்கிறார்கள்.
டாக்டர் ஜெயச்சந்திரனின் மனைவி வேணி ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். மகன் சரத் ராஜ் சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றிவருகிறார்.
இதுதொடர்பாக வேணி கூறும்போது, ‘நாங்கள் ஏற்கனவே எனது கணவரோடு சிகிச்சைகளும் மேற்கொள்வோம். அவரது பணியை தொடரவேண்டும் என்று முடிவு எடுத்து நாங்கள் 3 பேரும் இப்போது சிகிச்சை அளித்து வருகிறோம்.
இந்த பகுதி ஏழை மக்கள் ஜெயச்சந்திரன் இருந்தபோது பயன்பெற்றது போலவே இப்போதும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த முடிவை எடுத்துள்ளோம்’ எனது கணவர் இருந்தபோது தினமும் 200 நோயாளிகள் வரை சிகிச்சை பெற்று செல்வார்கள். இப்போது 30 பேர் வரை வருகிறார்கள்’ என்று கூறினார்.
டாக்டர் சரத் ராஜ் கூறும்போது, ‘எங்கள் தந்தை இறந்த போது வந்த மக்களை பார்த்து நாங்கள் உணர்ச்சி வசப்பட்டோம். இதனால் அவர்களுக்கு எங்களது சேவை தொடரவேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்தது’ என்று கூறினார்.
இந்த ஆஸ்பத்திரி தினமும் காலையில் 9.30 மணியில் இருந்து இரவு 9.30 மணிவரை 12 மணிநேரம் செயல்படுகிறது. காலையில் டாக்டர் வேணி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். மற்ற நேரங்களில் இரு மகன்களில் யாராவது ஒருவர் சிகிச்சை அளிக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X