search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் மூதாட்டிக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவ உதவியாளர் இடமாற்றம்
    X

    மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் மூதாட்டிக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவ உதவியாளர் இடமாற்றம்

    மன்னார்குடி அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவ உதவியாளரை பணியிட மாற்றம் செய்து மருத்துவத்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் குலமாணிக்கத்தை சேர்ந்தவர் கமலா (வயது 65).

    இவருக்கு இடுப்பு பகுதியில் சிறிய கட்டி இருந்ததால் கடந்த 13-ந் தேதி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார்.

    அப்போது பணியில் இருந்த மருத்துவ உதவியாளர் சேனாதிபதி, அந்த கட்டியை அகற்றுவதாக கூறி அந்த இடத்தில் 2 செ.மீட்டர் ஆழத்துக்கு காயத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனால் வலியில் துடித்த கமலாவிடம், இந்த கட்டிக்கு இப்படி தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் இடுப்பு பகுதியில் தொடர்ந்து வலி இருந்து வந்ததால் மீண்டும் நேற்று மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு தனது மகள் சித்ராவுடன் வந்த கமலா, இதுகுறித்து மருத்துவ கண்காணிப்பாளர் பரிமளாவிடம் முறையிட்டார்.

    இதையடுத்து அவர் உடனடியாக கமலாவை உள்நோயாளியாக அனுமதித்து தனது நேரடி கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகிறார்.

    இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் பரிமளா கூறியதாவது:-

    பாதிக்கப்பட்ட கமலாவுக்கு மருத்துவ உதவியாளர் சேனாதிபதி சிகிச்சை அளித்தது தொடர்ந்து அவரை அழைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்து மருத்துவத்துறை இணை இயக்குனர் உமா உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

    Next Story
    ×