search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் பகுதியில் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்ட 113 பேருக்கு சிகிச்சை
    X

    வேதாரண்யம் பகுதியில் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்ட 113 பேருக்கு சிகிச்சை

    வேதாரண்யம் பகுதியில் 3 நாட்களாக வாந்தி வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு வந்த 113 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம், கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், அகஸ்தியன் பள்ளி, தலைஞாயிறு ஆகிய பகுதிகளில் குழந்தைகள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த 3 நாட்களாக வாந்தி வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட 113 பேர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சிகிச்சைக்காக பொதுமக்கள் வேதாரண்யம் பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் வந்த வண்ணம் உள்ளனர்.

    வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சுகாதாரதுறை முதன்மை செயலாளர் பீலாராஜேஷ் ஆய்வு மேற்கொண்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் விசாரித்தார். பின்பு சுகாதாரதுறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர் கூறும்போது, வேதாரண்யத்தில் வாந்தி வயிற்றுப்போக்கால் 113 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதை பார்வையிட வந்தேன். நிலைமை தற்போது சீராக உள்ளது. போதுமான மருந்து மாத்திரைகள் கையிருப்பு உள்ளது. தண்ணீரால் இந்த பிரச்சனை வந்துள்ளது என்று கருதுகிறேன். அதனைசரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். #tamilnews

    Next Story
    ×