search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் நடத்தை விதிகள் அமல்: கடலூரில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்
    X

    தேர்தல் நடத்தை விதிகள் அமல்: கடலூரில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் கடலூரில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன.

    கடலூர்:

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதையடுத்து பொது இடங்களில் உள்ள சுவர் விளம்பரங்களை அழிக்கும்பணி, கொடிக்கம்பங்களை அகற்றும் பணி நடைபெற்றது.

    கடலூர் பெருநகராட்சியில் நகரசபை ஆணையர்(பொறுப்பு) டாக்டர் அரவிந்த்ஜோதி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் கடலூர் புதுப்பாளையம், ஆல்பேட்டை, கடலூர் முதுநகர், பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றினர். சில அரசியல் கட்சியினர் தாங்களாவே முன்வந்து கட்சி கொடிக்கம்பங்களை அப்புறப்படுத்தினர். மேலும் சில கட்சி தலைவர்களின் சிலைகளையும் ஊழியர்கள் துணியால் மூடி மறைத்தனர்.

    இது குறித்து நகரசபை ஆணையர்(பொறுப்பு) டாக்டர் அரவிந்த் ஜோதி கூறும்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி கடலூர் நகராட்சியில் பொது இடங்களில் உள்ள 30 கொடிக்கம்பங்களை அப்புறப்படுத்தி இருக்கிறோம். அதேபோல் தலைவர்களின் சிலைகளையும் மூடி மறைத்துள்ளோம் என்றார்.

    Next Story
    ×