search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலியோ சொட்டு மருந்து முகாம் 10-ந் தேதி நடக்கிறது
    X

    போலியோ சொட்டு மருந்து முகாம் 10-ந் தேதி நடக்கிறது

    தமிழகம் முழுவதும் வருகிற 10-ந்தேதி. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் வருகிற 10-ந்தேதி. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் அன்றைய தினம் 5 வயதிற்குட்பட்ட 70 ஆயிரத்து 839 குழந்தைகளுக்கு 549 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் 86 பள்ளிகளில் நடைபெறும். மேலும், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் நடமாடும் முகாம்கள் என 26 இடங்களில் நடைபெறவுள்ளது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×