search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆசிரியை இறந்த சோகத்தில் கண்ணீர் விட்டு கதறிய மாணவிகள்
    X

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆசிரியை இறந்த சோகத்தில் கண்ணீர் விட்டு கதறிய மாணவிகள்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உடல் நலக்குறைவால் இறந்த ஆசிரியை உடலை பார்த்து மாணவ -மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பைச் சேர்ந்தவர் பிரேமசுந்தரி (வயது 40). இவர் கோட்டையூரில் உள்ள அரசு ஆதி திராவிடர் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    மாணவ- மாணவிகளிடம் அன்போடும், எளிமையாகவும் பழகக்கூடியவர். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது மாணவ-மாணவிகளுக்கு வருத்தத்தை தந்தது.

    இந்த நிலையில் ஆசிரியை பிரேம சுந்தரி இன்று இறந்தார். இதனை கேள்விபட்ட மாணவ- மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஆசிரியை வீட்டிற்கு வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டு அவர்கள் ஆசிரியை வீட்டின் முன்பு திரண்டு நின்றதை கண்ட பொதுமக்களும் கண் கலங்கினர்.
    Next Story
    ×