search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவியிடம் ஈவ்டீசிங் - போக்சோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது
    X

    மாணவியிடம் ஈவ்டீசிங் - போக்சோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது

    விருதுநகரில் மாணவியிடம் ஈவ்டீசிங் செய்ததாக போக்சோ சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் பாண்டியன் நகர் அருகே உள்ள அண்ணா நகரைச் சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இவர் தினமும் பள்ளிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்ற கருப்பசாமி (17), அஜீத்குமார் (19) ஆகியோர் மாணவியிடம் கேலி-கிண்டல் செய்தனர்.

    இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் விஜய் என்ற கருப்பசாமி மற்றும் அஜீத்குமாரை கைது செய்தனர்.

    கைதான விஜய், வத்தலக்குண்டு செங்கல், சிமெண்டு ஆலையிலும், அஜீத்குமார் கமுதியிலும் வேலை பார்த்து வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×