search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுவிலக்கு விழிப்புணர்வு பிரசாரம்
    X

    மதுவிலக்கு விழிப்புணர்வு பிரசாரம்

    பரமக்குடியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மதுவிலக்கு பிரசாரம் நடைபெற்றது.
    பரமக்குடி:

    பரமக்குடியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மதுவிலக்கு பிரசாரம் நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தை சப்-கலெக்டர் விஷ்ணுசந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பரமக்குடி தாசில்தார் பரமசிவம், தனி தாசில்தார் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் காந்தி சிலை முன்பு இருந்து புறப்பட்டு பஸ் நிலையம் சென்று மீண்டும் காந்தி சிலையை அடைந்தது.

    இதில் சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, கீழமுஸ்லிம் மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் காளஸ்வரன், தினகரன், சியாம் சுந்தர், திட்ட அலுவலர்கள் காஜா முகைதீன், சந்திரசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×