search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடற்படைக்கு புதிய துணை தளபதி
    X

    கடற்படைக்கு புதிய துணை தளபதி

    இந்திய கடற்படையின் துணைத்தளபதியாக ஜி.அசோக் குமார் நேற்று பொறுப்பேற்றார். #ViceAdmiral #GAshokKumar
    சென்னை:

    மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அசோக்குமார், 1982-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி அன்று இந்திய கடற்படையின் நிர்வாகப் பிரிவில் பணியில் சேர்ந்தார். தேசிய பாதுகாப்பு கல்விக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளராகவும் செயல்படுகிறார். வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் படை வீரர்கள் கல்லூரியின் பட்டதாரி ஆவார்.

    ‘மோ’ என்ற இடத்தில் உள்ள ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சியையும், அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாண குவான்டிக்கோவில் உள்ள கடற்பயண செயல்பாட்டு கல்வியையும் பெற்றவர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ViceAdmiral #GAshokKumar
    Next Story
    ×