என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகாசி அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி
Byமாலை மலர்29 Oct 2018 3:52 PM GMT (Updated: 29 Oct 2018 3:52 PM GMT)
சிவகாசி அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம்புதூரில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. ஊருக்கு ஒதுக்குபுறமான பகுதியில் உள்ள இந்த ஏ.டி.எம். மையத்தில் புகுந்த மர்ம ஆசாமிகள் அங்குள்ள பணம் எடுக்கும் எந்திரத்தை இரும்பு கம்பியால் உடைத்து உள்ளனர்.
ஆனால் உடைக்க முடியாததால் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்தநிலையில் ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வங்கி அதிகாரிகளிடம் ஏ.டி.எம். மையத்தில் எந்திரத்தில் ஏற்பட்டு இருந்த சேதம் குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் ஏ.டி.எம். மையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை சோதனை செய்து பார்த்தபோது அந்த கேமராவுக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம்புதூரில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. ஊருக்கு ஒதுக்குபுறமான பகுதியில் உள்ள இந்த ஏ.டி.எம். மையத்தில் புகுந்த மர்ம ஆசாமிகள் அங்குள்ள பணம் எடுக்கும் எந்திரத்தை இரும்பு கம்பியால் உடைத்து உள்ளனர்.
ஆனால் உடைக்க முடியாததால் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்தநிலையில் ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வங்கி அதிகாரிகளிடம் ஏ.டி.எம். மையத்தில் எந்திரத்தில் ஏற்பட்டு இருந்த சேதம் குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் ஏ.டி.எம். மையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை சோதனை செய்து பார்த்தபோது அந்த கேமராவுக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X