search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணம் கொட்டையூர் கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
    X

    கும்பகோணம் கொட்டையூர் கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

    கொட்டையூர் கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று காலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அடுத்த கொட்டையூரில் அரசு கவின் கலை கல்லூரி உள்ளது. இங்கு சிற்ப வேலை சார்ந்த பாடப்பிரிவு கொண்ட கலை கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் விஷூவல் கம்யூனிக்கே‌ஷன் என்கிற 4 வருட பாடப்பிரிவு உள்ளது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் 4 வருட படிப்பு முடிந்த பின் மாணவர்களுக்கு 3 வருடம் என்றே அரசு சான்றிதழ் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதனை கண்டித்து இன்று காலை கொட்டையூர் அரசு கவின் கலை கல்லூரி மாணவர்கள் 4-ம் ஆண்டு மாணவர் மோசஸ் பால்ராஜ் தலைமையில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் 70 மாணவர்கள், 20 மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் கும்பகோணம் - சுவாமிமலை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×