search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளி பட்டாசுக் கடைகளை நடத்த தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்க காலவரையறை நீட்டிப்பு - கலெக்டர் தகவல்
    X

    தீபாவளி பட்டாசுக் கடைகளை நடத்த தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்க காலவரையறை நீட்டிப்பு - கலெக்டர் தகவல்

    தீபாவளி பட்டாசுக் கடைகளை நடத்த தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

    கோவை:

    கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நவம்பர் 6-ந் தேதி தீபாவளிப்பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி கோவை மாவட்ட ஊரகப் பகுதிகளில் தற்காலிகமாக பட்டாசுக் கடைகள் நடத்திட விருப்பம் உள்ளவர்கள், வெடிபொருள் சட்ட விதிகளின்படி மாவட்ட கலெக்டரிடம் தற்காலிக பட்டாசு உரிமம் பெற்றிட வேண்டும்.

    உரிமத்தினைப் பெறுவதற்கென கூடிய தங்களது விண்ணப்பத்தினை படிவம் ஏஇ-5 ( 5 - பிரதிகள்), தற்காலிகமாக பட்டாசு விற்பனை உரிமம் கோரும் புலம் 9 சதுர மீட்டர் முதல் 25 சதுர மீட்டர் வரை உள்ளடக்கிய நிலத்தைக் குறிக்கும் வரை படத்தில் சாலை வசதி, சுற்றுப் புறத்தன்மை மற்றும் கடையின் கொள்ளளவு ஆகியவற்றினை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

    உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் மனுதாரராக இருப்பின், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டில் வீட்டு வரி செலுத்திய ரசீது நகல், உரிமம் கோரும் இடம் வாடகைக் கட்டிடம் என்றால் இடத்தின் பத்திர நகல் மற்றும் வீட்டு வரி செலுத்திய ரசீது நகலுடன், கட்டிட உரிமையாளரிடம் ரூ.20-க்கான முத்திரைத் தாளில் பெறப்பட்ட அசல் சம்மதக் கடிதம், உரிமக் கட்டணம் ரூ.500 மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள வண்ண புகைப்படங்கள் - 2 ஆகிய ஆவணங்களுடன் வருகிற 28-ந் தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    இம்மனுக்கள் பரிசீ லனை செய்யப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அக்டோபர் 20-ந் தேதிக்குள் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×