என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுகவின் அமைப்பு செயலாளராக நியமனம்
Byமாலை மலர்14 Sep 2018 4:32 PM GMT (Updated: 14 Sep 2018 4:36 PM GMT)
அதிமுகவின் அமைப்பு செயலாளராக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சட்ட ஆலோசகராக பி.ஹெச்.பாண்டியன் ஆகியோரை நியமித்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். #Vijayabaskar #OPS #EPS #ADMK
சென்னை :
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஒ. பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அதிமுகவின் அமைப்பு செயலாளராக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயபாஸ்கருடன் சேர்த்து கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்திரம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் ஆகியோரும் அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பி.ஹெச்.பாண்டியன் சட்ட ஆலோசகராகராகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளராக காஞ்சி பன்னீர் செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியில் தலைமையகத்தில் நடைபெறும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குட்கா விவகாரத்தில் சிபிஐ சோதனைகளுக்கு பிறகு விஜயபாஸ்கர் தார்மீக அடிப்படையில் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் அதிமுகவின் அமைப்பு செயலாளராக இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது. #Vijayabaskar #OPS #EPS #ADMK
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஒ. பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அதிமுகவின் அமைப்பு செயலாளராக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயபாஸ்கருடன் சேர்த்து கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்திரம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் ஆகியோரும் அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பி.ஹெச்.பாண்டியன் சட்ட ஆலோசகராகராகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளராக காஞ்சி பன்னீர் செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியில் தலைமையகத்தில் நடைபெறும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குட்கா விவகாரத்தில் சிபிஐ சோதனைகளுக்கு பிறகு விஜயபாஸ்கர் தார்மீக அடிப்படையில் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் அதிமுகவின் அமைப்பு செயலாளராக இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது. #Vijayabaskar #OPS #EPS #ADMK
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X